அறிமுகம்

அருப்புக்கோட்டை நகரம்  மதுரை மாநகரிலிருந்து 48 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மல்லிகைப்பூ தோட்டங்கள்,  பழமையான கோயில்கள், மசூதிகள்  மற்றும் தேவாலயங்கள் இருப்பதனால்    தமிழகத்தின் மிகவும் சிறப்புவாய்ந்த  நகரங்களில்   இதுவும்  ஒன்றாகும். அருப்புக்கோட்டை நகர் குறித்து பல்வேறு பழமையான தகவல்களை கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்..

இக்கல்வெட்டுக்களில்"செங்காட்டிருக்கை" எனஅருப்புக்கோட்டை நகரம் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் “இடத்துவளி“ என இன்னொரு பகுதியும் இருந்தது, என்ற குறிப்பும் அக்கல்வெட்டில் உள்ளது.இவ்விரண்டு பகுதிகளையும் சேர்த்து செங்காட்டிருக்கை இடத்துவளி என்று அழைக்கப்பட்டதாகவும் கல்வெட்டு கூறுகிறது. இன்றும்  நகரின் வடகிழக்கில் உள்ள “செங்காட்டூரணி“ என்ற ஊரணி நம் நகரின் பழைய பெயரை நினைவூட்டி நிற்பது குறிப்பிடத்தக்கது.மேலும் பல வணிகத் தெருக்கள் பெரியதெரு   என்ற பெயரில் இருந்துள்ளதாக அக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. 1.விக்கரமபாண்டியன் பெரியதெரு 2.வீரபாண்டியன் பெரியதெரு 3.பழிவிலங்கிப் பெரியதெரு 4.சீவல்லவப் பெரியதெருவான தேசியாசிரியப் பட்டணம் ஆகியன நகரில் இருந்த சில பெரியதெருக்கள்  என்று கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.

சுமார் 400 வருடங்களுக்கு முன் மதுரையை ஆண்ட வீரப்பநாயக்கர் இங்கு ஒரு கோட்டையை  கட்டினார்.அதனை ‘அரவக்கோட்டை’ என்று அப்பொழுது அழைத்து வந்தனர்.அந்த"அரவக்கோட்டையே" நாளடைவில் அருப்புக்கோட்டையாக  மாறியிருக்கிறது  என தொல்பொருள் ஆய்வாளார்கள் தெரிவிக்கின்றனர்.  அருப்புக்கோட்டையைச்  சுற்றி மல்லிகை பூந்தோட்டங்கள் அதிகம் அமைந்திருந்ததால் அரும்புக்கோட்டை என்று முன்னொரு காலத்தில் அழைத்தனர். காலப்போக்கில் அரும்புக்கோட்டை என்ற பெயர் மருவி அருப்புக்கோட்டையாக மாறியது எனவும் செவிவழிச் செய்தியாக கூறப்படுவதும் உண்டு.  இங்கு நல்லிர் முஹைதீன் ஆண்டவர் மஸ்ஜித், வாழவந்தபுரம் ஜும்மா பள்ளிவாசல்,தௌகீத் ஜமாத் பள்ளிவாசல், ஸ்ரீ அருள்மிகு சொக்கநாதர் ஸ்வாமி கோயில், அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில்,சிவன் கோயில்,சி.எஸ்.ஐ தேவாலயம்,முருகன் கோயில்,மலையரசன் கோயில்   போன்ற முக்கியமான ஆன்மீக அம்சங்கள் இங்கு நிறைந்துள்ளன.

மேலும் ஒரு யாத்திரை ஸ்தலமாக மட்டுமல்லாது முக்கியமான தொழில் நகரமாகவும் இந்த அருப்புக்கோட்டை திகழ்கிறது.

மேலும் விருதுநகர்-மானாமதுரை சந்திப்புக்களுக்கிடையில் உள்ள முக்கியமான ரயில் நிலையம் அருப்புக்கோட்டை ஆகும். மதுரை, எட்டயபுரம், தூத்துக்குடி, விருதுநகர், ரமண மகரிஷி பிறந்த இடமான திருச்சுழி  போன்ற பெரிய நகரங்கள் அருப்புக்கோட்டையிலிருந்து சிறிது தொலைவில் உள்ளன.இங்கிருந்து  இங்கு மணிலாக்கடலை, கருப்பட்டி, நல்லெண்ணெய் முதலியவற்றின் விற்பனை மொத்த வியாபாரமாக நடைபெறுகிறது. இங்கு நெசவுத் தொழிலும் சிறப்புற்றுள்ளது. இங்கு தயாரிக்கப்படும் சேலைகள், வேட்டிகள் இந்தியாவில் பல இடங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. அருப்புக்கோட்டையில் சித்தர்கள் பலர் சமாதி அடைந்த இடமாகவும் கருதப்படுகிறது.அருப்புக்கோட்டை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதியாகும் .இவ்வாறு சிறப்பு பெற்ற இந்த பகுதிக்கு தற்போது வைகைச்செல்வன் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி  பெற்று பள்ளிக்க்கல்வித்துறை அமைச்சராகவும்  நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அருப்புக்கோட்டை சட்டமன்றம்

சட்டமன்ற தேர்தல் ஆண்டு
வெற்றி பெற்ற வேட்பாளர்
கட்சி
வாக்கு விழுக்காடு (%)
2011
அதிமுக
2006
தங்கம் தென்னரசு
திமுக
44.88
2001
K.K.சிவசாமி
அதிமுக
46.07
1996
V.தங்க பாண்டியன்
திமுக
43.70
1991
V.G.மணி மேகலை
அதிமுக
58.91
1989
V.தங்க பாண்டியன்
திமுக
45.59
1986 (இடைத்தேர்தல்)
பஞ்சவர்ணம்
அதிமுக
66.32
1984
M.பிச்சை
அதிமுக
45.32
1980
M.பிச்சை
அதிமுக
53.67
1977
எம். ஜி. இராமச்சந்திரன்
அதிமுக
56.23

                                                                                                        Aruppukkottaitown.blogspot.in