அருப்புக்கோட்டை பள்ளி  தேர்வு முடிவுகள் 
     [பன்னிரெண்டாம் வகுப்பு  தேர்ச்சி விகிதம் மற்றும் மதிப்பெண்கள்] 

  • நோபிள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி  :
          தேர்ச்சி சதவிகிதம்        100%
         முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்கள்
         எம்.தினேஷ்                                  1179   மதிப்பெண்கள்
         யூ.சோனியா சௌந்தரி                  1173   மதிப்பெண்கள்
         எஸ்.ப்ரீதா                                     1159   மதிப்பெண்கள்

  • எஸ்.பி.கே.மேல்நிலைப் பள்ளி :

           தேர்ச்சி சதவிகிதம்             99.6 %
         முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்கள்
          கே.பி.அருண்குமார்                          1176    மதிப்பெண்கள்
          ஏ.சுதர்சன நாராயணன்                      1154   மதிப்பெண்கள்
          பி.நவீன்ராஜ்                                     1152   மதிப்பெண்கள்
  • தேவாங்கர் மேல்நிலைப் பள்ளி  :
          தேர்ச்சி சதவிகிதம்                   98.4%
           முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்கள்
            வி.சசிகுமார்                           1170 மதிப்பெண்கள்
           ஜி,அருண்குமார்                      1137 மதிப்பெண்கள்
           எம்.வினோத்குமார்                  1131 மதிப்பெண்கள்
  • எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப் பள்ளி :
          தேர்ச்சி சதவிகிதம்             99.8 %
           முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்கள்
            வி.ராஷிகா                      1166 மதிப்பெண்கள்
           எம்.ஆலிஸ் நிஷா            1164 மதிப்பெண்கள்
           வி.கார்த்திகை பிரியா       1150  மதிப்பெண்கள்
  • தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி  :
           தேர்ச்சி சதவிகிதம்    100% 
            முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்கள்
              எஸ்.லோகப்ரீதி          1161   மதிப்பெண்கள்
               பி.சரண்யா                 1156   மதிப்பெண்கள்
               ஆர்.பிரியதர்ஷினி      1146    மதிப்பெண்கள்
  • ஸ்ரீசவுடாம்பிகா  மெட்ரிக்குலேசன்  :
            தேர்ச்சி சதவிகிதம்      100%
           முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்கள்
             எஸ்.எம்.விக்னேஷ்வரா                     1161  மதிப்பெண்கள்
              ஜே.சி.கோகுல கிருஷ்ணா                  1158  மதிப்பெண்கள்
              ஜி.சுவாதி                                          1154 மதிப்பெண்கள்
  • சாலியர் மகாஜன மேல்நிலைப் பள்ளி  :
          தேர்ச்சி சதவிகிதம்          100%
        முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்கள்
           பி.நிதிஷ்                  1153    மதிப்பெண்கள்
           ஏ.அனு                     1145   மதிப்பெண்கள்
           ஏ.விஜி                      1143  மதிப்பெண்கள்
  • அல் அமீன் முஸ்லீம் மேல்நிலைப் பள்ளி  :
         தேர்ச்சி சதவிகிதம்              97%
        முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்கள்
          ஏ.வாவர் மணி                          1116   மதிப்பெண்கள்
          ஆர்.நஸ் ரீன் பேகம்                  1036   மதிப்பெண்கள்
          எஸ்.ஷகீலா  பர்வீன்                 1027 மதிப்பெண்கள்
  • சி.எஸ்.ஐ.பெண்கள் மேல்நிலைப் பள்ளி  :
        தேர்ச்சி சதவிகிதம்        98%
       முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்கள்
         ஏ.ஜெயப்ரியா         1133  மதிப்பெண்கள்
         எம்.கற்பகலெட்சுமி  1090 மதிப்பெண்கள்
         எஸ்.லிங்கேஸ்வரி   1085  மதிப்பெண்கள்

அருப்புக்கோட்டை பள்ளி தேர்வு முடிவுகள்


அருப்புக்கோட்டை கல்வி மாவட்டம்  
முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை 

கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி துவங்கி 31ம் தேதி  வரை நடைபெற்று முடிந்த தமிழக பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் அருப்புக்கோட்டை கல்வி மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை  பிடித்துள்ளனர் 
 அவர்கள் பெற்ற மதிப்பெண்களும் பின்வருமாறு :


இதில் முதலாவது மற்றும் மூன்றாவது இடத்தை நோபிள் மெட்ரிக்குலேசன் பள்ளி மாணவர்களும்,இரண்டாவது இடத்தினை அருப்புக்கோட்டை 
எஸ் .பி.கே  ஆண்கள் பள்ளி மாணவனும் பிடித்துள்ளனர்.இவர்கள்  பள்ளிக்கும்,ஆசிரியர்களுக்கும்,பள்ளி மாணவ ,மாணவியருக்கும்,பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர். 

அருப்புக்கோட்டை கல்வி மாவட்டம்

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடற்பரப்பில்(மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணைப்பு) பல மணற் திட்டுக்களும்,சிறிதும் பெரிதுமான பல தீவுகளும் உள்ளன,அவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் 12 தீவுகள் உள்ளன,

1480 ம் ஆண்டில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் பெரும் புயல் ஏற்பட கடற் அடிப்பரப்பில் ஏற்பட்ட நிலவியல் மாற்றத்தால் வங்கக் கடலில் ராமேஸ்வரம் தீவும் அதை சுற்றி 11 தீவுகளும் உண்டாயின என்கிறார்கள்.

அத்தீவுகளின் பெயர்கள்:

01 ராமேஸ்வரம்

02 குந்துகால் தீவு

03 புனவாசல் தீவு

04 முயல் தீவு

05 பூமரிச்சான் தீவு

06 முல்லைத் தீவு

07 மணல் தீவு

08 வாலித் தீவு (கச்சத் தீவு)

09 அப்பா தீவு

10 நல்ல தண்ணீர் தீவு

11 உப்பு தண்ணீர் தீவு

12 குருசடி தீவு



இதில் ஓரளவு பெரிய பரப்பினைக்கொண்டது கச்சத்தீவு ஆகும் ,ராமேஷ்வரத்தில் இருந்து 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது, பரப்பளவு சுமார் 285 ஏக்கர்(1.15ச.கி.மீ).

இத்தீவானது 1974 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது, 1974 இல் இலங்கை பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகாவிற்கும், இந்திய பிரதமர் இந்திராகாந்திக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் மூலம் இலங்கைக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது அன்று முதல் இக்கடற்பரப்பில் தமிழக மீனவர்களுக்கு சோதனைக்காலம் துவங்கிவிட்டது.

கச்சத்தீவினை தாரைவார்த்துக்கொடுத்ததின் பின்னால் உள்ள அரசியலையும், நமது தமிழக அரசியல் தலைவர்களின் செயல்படாத்தன்மையும் விரிவாக காணலாம்.

1974 ஒப்பந்தம்:

பண்டார நாயகா மறைவுக்கு பின்னர் அவரது மனைவி சிரிமாவோ பண்டார நாயகா இலங்கையின் பிரதமராக பதவிக்கு வந்தார், ஆனால் அவருக்கு இலங்கையில் அரசியல் ரீதியாக பல நெருக்கடிகள் ஏற்பட்டதால் தனது அரசியலை வலுவாக்கிக்கொள்ள ஏதேனும் அசாத்திய சாதனை செய்ய விரும்பினார், இதனால் நீண்ட நாட்களாக இலங்கை உரிமைக்கேட்டு வந்த கட்சத்தீவு பிரச்சினையை கையில் எடுத்துக்கொண்டு ,அப்போதைய இந்திய பிரதமரை அனுகினார்.

பண்டாரநாயகா காலம் தொட்டே நேரு குடும்பத்துடன் நட்புறவு கொண்டிருந்தார்கள்,அதே நட்புடன் இந்திராவும் இருந்ததால் காரியம் சாதிக்க விரும்பினார். அக்காலக்கட்டத்தில் இந்திரா தலைமையிலான அரசுக்கும் ஒரு நெருக்கடி உருவானது,அது என்னவெனில்,மே-18,1974 இல் இந்திராவின் திட்டப்பட்டி ,ராஜஸ்தான் பாலைவனத்தில் போக்ரானில் முதல் அணுகுண்டு வெடிப்பு சோதனை நிகழ்த்தப்பட்டிருந்து. இதனால் உலக நாடுகள் எல்லாம் இந்தியாவின் மீது கோபம் கொண்டிருந்தன, மேலும் ஐநா சபையில் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க ஒரு தீர்மானம் கொண்டு வரும் திட்டமும் இருந்தது. எனவே ஐநா சபையில் தனக்கான ஆதரவை திரட்ட அண்டை நாடுகளுடன் நட்புறவை வளர்த்துக்கொள்ள இந்திரா காந்தி அவர்கள் ஆர்வமாக இருந்த சூழலில், சிரிமாவோ கட்சத்தீவைக்கேட்கவும் விட்டுக்கொடுத்து இலங்கையை வளைத்துவிடலாம் என திட்டமிட்டார்கள்.

பல நாடுகள் இருக்கும் போது இலங்கையால் என்ன பெரிதாக ஐநாவில் உதவிட முடியும் என நினைக்கலாம்,ஆனால் அந்த காலக்கட்டத்தில் ஐநாவின் பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்புநாடுகளின் தலைமை பொறுப்பினை இலங்கையே வகித்து வந்தது.

ஐநா பாதுகாப்பு அவையில் ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினர்கள்,அது அல்லாமல் 15 உறுப்பினர்களை தற்காலிகமாக தேர்ந்தெடுப்பார்கள், பின்னர் அவர்களில் ஒரு நாட்டினை அகரவரிசைப்ப்படி ஒவ்வொரு மாதமும் பாதுகாப்பு அவையின் தலைவராக சுழற்சி முறையில் தேர்வு செய்வார்கள், எனவே அக்காலத்தில் இலங்கைக்கு பாதுகாப்பு அவையின் தலைவராக வரும் சூழல் உருவானது.

எனவே இலங்கையை வளைப்பதன் மூலம் ஐநா பாதுகாப்பு அவையில் கொண்டு வரும் தீர்மானத்தினை தகர்க்கலாம் என திட்டம் போட்டு ,கச்சத்தீவினை தாரை வார்க்கும் திட்டத்தினை முன்னெடுத்தார் இந்திராகாந்தி.

இது போன்ற "சூப்பர் திட்டங்களை" எல்லாம் அரசியல்வாதியே போட்டிருப்பார் என்றெல்லாம் சொல்ல முடியாது,எல்லாம் அயலக உறவுத்துறை அதிகாரிகளின் கைங்கரியமாகத்தான் இருக்க வேண்டும்.

இத்தனைக்கும், 1971 ஆம் ஆண்டு பங்களாதேச உருவாக்க போரின் போது ,பாகிஸ்தான் விமான படை விமானங்கள் இந்திய வான் வெளியில் பறக்க தடை என்பதால் ,அரபிக்கடலில் சுற்றிக்கொண்டு ,கிழக்கு பாகிஸ்தான் எனப்பட்ட பங்க்ளாதேசத்திற்கு செல்ல வேண்டிய நிலை,அப்பொழது, விமான படை விமானங்களுக்கு எரிப்பொருள் கொடுத்து பாகிஸ்தானுடன் நட்புப்பாராட்டிய நாடு தான் இலங்கை. ஆனாலும் அதை எல்லாம் மறந்துவிட்டு நட்புப்பாராட்டி கச்சத்தீவினை கொடுக்க நம்ம ஆட்களே வரிந்துக்கட்டி வேலை செய்தார்கள் என்பதை எந்த வகையில் சேர்க்க?

இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இந்தியாவின் எந்த ஒரு பகுதியையும் அன்னிய நாட்டிற்கு விட்டுக்கொடுக்க நம் அரசியல் அமைப்பு சட்டத்தில் இடமேயில்லை, சட்டமேதை அம்பேத்கார் தொலைநோக்கு பார்வையோடு அப்படி ஒரு கிடுக்கிப்பிடி போட்டு வைத்திருந்தார் எனலாம். அதனைப்பின்னர் விரிவாக காணலாம்.

இந்திய நாட்டின் ஒரு பகுதி என சொன்னால் தானே கொடுக்க முடியாது என கட்சத்தீவு இந்தியாவின் பகுதியேயில்லை ,இரு நாட்டுக்கும் இடையே பொதுவாக உள்ள ஒரு பகுதி ,யாருக்கு சொந்தம் என தெரியாத "டிஸ்பியுட்டட்" லேண்ட் என இந்தியாவே வலிய தெரிவித்தது. இது தமிழகத்திற்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய துரோகம் ஆகும்.ஏன் எனில் கட்சத்தீவு தமிழகத்தின் ஒரு பகுதியாகும் அதற்கான ஆதரங்களும் உள்ளன.

இவ்வாறு கடல்ப்பகுதியில் உள்ள பகுதியில் ஒரு இடத்தினையும் உடனே கொடுக்க முடியாது,புதிதாக கடல் எல்லையை வரையறுக்க வேண்டும்.எனவே 1974 இந்தியா-இலங்கை கடல் எல்லை மறுசீரமைப்பு ஒப்பந்தம் என போடப்பட்டது. பின்னர் கச்சத்தீவினை இலங்கைக்கு விட்டுக்கொடுப்பதாகவும், இந்திய மீனவர்களுக்கு என சில உரிமைகள் அளிக்க ஒப்பந்தம் இடப்பட்டுள்ளதாகவும் சொல்லி கட்சத்தீவினை தாரை வார்த்துவிட்டார்கள்.

இதில் நடந்த உரிமை மீறல்களை காண்போம்,

இரு நாட்டுக்கடல் எல்லைகள் ஒன்றின் மீது ஒன்றாக பரவும் நிலையில் புதிய கடல் எல்லை வகுக்க வேண்டும் எனில் ,இருநாட்டுக்கும் சம தூரம் வருமாறு கடல் எல்லை வகுக்க வேண்டும்,அப்படி செய்தால் கட்சத்தீவு தானாகவே இந்திய கடல் எல்லைக்குள் வந்துவிடும் என்கிறார்கள்,ஆனால் அப்படி செய்யாமல் இலங்கைக்கு அதிகப்படியான கடல் எல்லை வருமாறு எல்லைப்பிரித்து விட்டார்கள்.

மேலும் இந்தியாவின் ஒரு அங்கமான நிலப்பரப்பை வேண்டுமென்றே இல்லை என்று சொல்லிவிட்டார்கள். அதனை விரிவாக காண்போம்.

கச்சத்தீவு தமிழகத்தின் ஒரு பகுதி:

வெள்ளையர்களின் காலனியாக இந்தியா இருந்த போதும் இந்தியாவில் பல தன்னாட்சி பெற்ற சமஸ்தானங்களும்,ஜமீந்தார்களும் இருந்தார்கள்,அவர்களின் ஆளுகைக்குட்பட்ட நிலப்பரப்பின் உரிமையாளர்கள் அவர்களே, பிரிட்டீஷ் அரசு கூட அல்ல.

தமிழகத்தின் ராமநாதபுரம் சமஸ்தானத்துக்குட்பட்ட ஒரு நிலப்பரப்பே கச்சத்தீவு ஆகும், கி.பி 1882 ஆம் ஆண்டு முதல் வங்காள விரிகுடாவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடைப்பட்ட கடற்பரப்பில் கச்சத்தீவு உட்பட எட்டுத்தீவுகளுக்கு உரிமையாளர்கள் ராமநாதபுர சமஸ்தானமே. இதற்கான ஆவணங்களும், மேலும் பலருடன் இடப்பட்ட குத்தகை ஒப்பந்தங்களும் உள்ளன. வெள்ளையருக்கே கூட தீவுகளை குத்தகைக்கு விட்டிருக்கிறார் என ஆவணங்கள் உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

மேலும் கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்தினை கட்டியதும் ஒரு தமிழரே, 1905ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த சீனி கருப்பன் படையாச்சி என்ற மீனவர் புனித அந்தோனியார் கோயிலைக் கட்டினார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 4ம் நாள் திருவிழா நடக்கும். இதில் தமிழர்கள் யாருடைய அனுமதியும் பெறாமல் செல்லாம். இலங்கை பக்தர்கள் இலங்கை அரசின் அனுமதி பெற்று தான் வரவேண்டும்.

கச்சத்தீவுரிமையை நிலைநாட்டும் பல ஒப்பந்தங்கள்,ஆவண விவரங்கள்:

1. During A.D. 1605, the clan of Ramanathapuram Sethupathy King was established by the Madurai Nayaks, incorporating 69 coastal villages and 7 Islands, of which Katchatheevu Island is one of the Island.

2. A copper plate plaque issued by King Koothan Sethupathy who ruled Ramanathapuram during the years 1622- 1635, depicts that the Sea upto Talaimannar belonged to Sethupathy Kings.

3. Coronation flowers which adorn the Goddess, Malai Valar Kathali Ammai of Rameswaram are grown in Katchatheevu Island. Similarly, cattle’s that are donated to the Temple are cared for in Katchatheevu Island and the Milk and other items needed for pooja are brought only from Katchatheevu island.

4. In the Kingdom of Ramanathapuram, there existed a separate account section to maintain and audit the accounts of Kathatheevu Island.

5. In the plaque issued to Jamindarine Mangaleswari Natchiyar, who took over after the period of Ramanathapuram King Muthuramalinga Sethupathy (who was imprisoned for a long period for having opposed the British), it is clearly mentioned that Katchatheevu Island belonged to Ramanathapuram Zamin.

6. There is a clear document evidencing leasing out Katchatheevu Island to East India Company by Ramanathapuram Sethupathy in the year 1822.

7. In Queen Victoria’s 1858 Proclamation whereby the powers got transferred to British Rule from East India Company, reference is made that Katchatheevu Island belong to Ramanathapuram Zamin.

8. P.P.Peris, who during the years of British Rule in 1936- 40, served as an Assistant Draftsman and later became a Ministerial Secretary after Sri Lanka attained independence, on 08.05.1966, made the following statement, confirming that Katchatheevu Island belonged to Ramanathapuram Kings. He says, “During the years 1936-40, when I served as Assistant Draftsman in the Land Survey Department, I was directed to survey the district boundaries of Ceylon. Therefore, I perused all records, documents, historical evidences and the Queen Victoria’s proclamation, by which 1 found that Katchatheevu Island belonged to King Sethupathy, Therefore I drew the Northern District of Ceylon delineating Katchatheevu Island.” This statement issued by the Ministerial Secretary on 08.05.1966, was widely reported in the then Daily Mirror published from Sri Lanka and thereafter reported in Indian Express in India.

9. There is a Registered Document (Registration No. 510/1880, Book 1, Volume 16) evidencing the fact that on 23.06.1880, eight coastal villages and four Island, including the Katchatheevu Island, belong to the Ramanathapuram Sethupathy’s were given in lease by the District Collector, Madurai jointly to one Abdul Kadar Marakayar and Muthusamy Pillai.

10. By a document dt.04.02.1885 (Registration No. 134/1885), Muthusamy Pillai, has taken the Katchatheevu Island on an annual lease of Rs.15 per annum from the Estate Manager of Ramanathapuram Sethupathy for the purpose of procuring dye roots.

11. Under a pact entered into between the Dutch and Ramanathapuram Seethupathy during the year 1767, a clause was incorporated to permit ail those residing Ramanathapuram Zamin can always visit Katchtheevu Island.

12. Baskara Sethypathy of Ramanathapuram, has assigned a portion of Katchatheevu island to Poet Sundaram.

13. When Zamindari Abolition Act came into force, Katchatheevu Island is mentioned as 285 Acres of Government Poromboke land in Ramanathapuram Village.

14. In the Ramanathpuram Gazetteer, issued by S.A.Viswanathan, Assistant Revenue Officer, Madras (then Tamiinadu was called Madras) on 11.11.1958, in Register No.68, Katchatheevu Island is shown as comprised in Ramanathapuram Village.

15. On 01.07.1913, when few Islands were taken on a 15 year lease by the Government of Madras Presidency from Ramanathapuram Sethupathy, Katchatheevu Island is mentioned by the Secretary to Government, as a territory belonging to Ramanathapuram Zamin and situate on the North East of Ramanathapuram.

16. In the year 1947, one K.M.Mohammed Merasa Marakayar, took the Katchatheevu Island on lease from Ramanathapuram Sethupathy. In the documents which was then executed, Katchatheevu Island was shown as a territory situated between Talaimannar and Danuskodi and belonging to Ramanathapuram Suzerainty.

17. In the Land Document Register issued by the Government, firstly issued in the year 1957 and again reprinted and issued as an updated publication, in the year 1966, at page 107, Katchatheevu Island is mentioned as a uninhabited territory belonging to Danuskodi.

18. Between the years 1913 and 1928, many Islands including the Katchatheevu Island were taken on lease from Ramanathapuram Sethupathy Kings and were again sublet to fishermen.

19. On several occasion the Sethupathy Kings, have themselves directly leased out many islands including the Katchatheevu Island to fishermen. There are records to show that fishermen from Tondi and Nambuthazhai have taken such leases.

20. In all the Indian Land Survey Records issued between the years 1874 and 1956, Katchatheevu Island is depicted as an Indian Territory alone. The Indian Land Survey Department has mentioned Katchatheevu Island as, measuring 285 Acres and 20 cents comprised in Survey No.1250,


இந்தியா சுதந்திரமடைந்த போது சமஸ்தானங்கள் அனைத்தும் இந்திய யூனியனில் இணைக்கப்பட்டு ஒரு தேசமாக உருவாக்கப்பட்டது, அவ்வேளையில் ராமநாதபுரம் சமஸ்தானமும் இணைக்கப்பட்டது, அவர்கள் சமஸ்தானம் குறித்த நில ஆவணங்கள் அனைத்தும் மத்திய அரசிடம் ஒப்படைக்கப்பட்டது,எனவே அனைத்து ஆவணங்களும் மத்திய அரசிடம் சிக்கிக்கொண்டதால் யாரும் கேள்விக்கேட்க முடியாது என 1974 இல் துணிகரமாக கச்சத்தீவின் உரிமையாளர் யார் என தெரியாத "டிஸ்பியுட்டட் லேண்ட்" என அறிவித்து இலங்கைக்கு கைமாற்றிவிட்டார்கள்.

இவ்வாறு செய்தால் மட்டுமே இந்தியாவின் நிலப்பரப்பை அன்னிய நாட்டுக்கு விட்டுக்கொடுக்க முடியும்,அவ்வாறு இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை சட்டமேதை அம்பேத்கர் வடிவமைத்துவிட்டார் என முன்னர் குறிப்பிட்டதை இப்பொழுது விரிவாக காண்போம்.

இந்தியா என்பது முழு தன்னாட்சி பெற்ற ஒரு நாடு ,அதன் செயல்ப்படுத்தும் தலைமை பொறுப்பில் உள்ளவர்களுக்கு அன்னிய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் நிறைவேற்ற , நிர்வகிக்க என அனைத்து அதிகாரங்களும் உண்டு. ஒரு புதிய நிலப்பரப்பினை இந்தியாவுடன் இணைக்க யாருடைய அனுமதியும் பெறத்தேவையில்லை,ஆனால் ஏற்கனவே இந்தியாவுடன் இணைந்த நிலப்பரப்பினை அன்னிய நாடுகளுக்கோ, சக்திகளுக்கோ தன்னிச்சையாக விட்டுக்கொடுக்க முடியாது என அரசியலமைப்பு சட்டத்தினை வரையறுத்துவிட்டார்.

ஆனால் சுதந்திரமடைந்த காலத்தில் சரியாக எல்லைப்பிரிக்காமல் இருந்தது எனவே எல்லைப்பிரச்சினையை தீர்க்க , பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தம் நிலப்பரிமாற்றம் செய்யலாம் எனவும் வழியும் உருவாக்கி இருந்தார், அதை வைத்தே கட்சத்தீவை தாரைவார்த்தார்கள்.

மேலும் அரசியல் நிர்ணய சட்டத்தினை வடிவமைக்கும் போது பல பரிசீலனைகளை அரசியல் தலைவர்கள் முன் வைத்திருக்க கூடும்,எனவே ஆளுவோருக்கு இப்படி நிலத்தை விட்டுக்கொடுக்க அதிகாரம் இல்லைனு சொல்வதை ஏற்கவில்லை போல எனவே , அதுக்கும் ஒரு ஓட்டையும் போட்டுக்கொடுத்திருக்கார், ஆனால் கொஞ்சம் சிக்கலாக ,எளிதில் நிலப்பரப்பை விட்டுக்கொடுக்க முடியாத படி தான் செய்திருக்கார் எனலாம்.

இந்தியாவுக்கு சொந்தமான நிலபரப்பினை விட்டுக்கொடுக்க வேண்டும் எனில் அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்து, அதனை மாநிலங்கள் அவை,மக்களவை இரண்டிலும் சமர்ப்பித்து வெற்றிப்பெற வேண்டும், அதன் பின்னர் அச்சட்டத்தினை எந்த மாநிலத்தின் நிலப்பரப்பினை விட்டுக்கொடுக்க இருக்கிறார்களோ அம்மாநில சட்டமன்றத்திலும் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும்,அதன் பின்னரே நிலப்பரிமாற்றம் செய்யலாம்.

நாடாளுமன்ற இரு அவையிலும் ஒப்புதல் பெறுவதோடு,மாநில சட்டமன்றத்திலும் ஒப்புதல் பெறுவது(rattification at state council) என்பது கடினமான காரியம் எனவே எளிதில் நிலப்பரப்பினை விட்டுக்கொடுக்க முடியாது என நினைத்திருக்கலாம்.

அம்பேத்காருக்கு அப்போவே தெரிஞ்சிருக்கும் போல நம்ம அரசியல்வாதிகள் வருங்காலத்தில் காசுக்கு நாட்டையே வித்தாலும் வித்துடுவாங்கன்னு எனவே முன்னெச்சரிக்கையாக சிக்கலான சட்டத்தை போட்டு வைத்துவிட்டார்.

கச்சத்தீவினை விட்டுக்கொடுக்கும் நிகழ்வில் டிஸ்பியூட்டட் லேண்ட் என அறிவித்து விட்டுக்கொடுக்க மேற்சொன்ன சட்ட சிக்கலே காரணம் ஆகும்.

கச்சத்தீவு குறித்தான ஆவணங்களை வைத்து நமக்கு சொந்தமான நிலம் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், முன்னர் அரசு ஒப்பந்தம் மூலம் விட்டுக்கொடுத்த கச்சத்தீவு உடன்படிக்கை செல்லாது என அறிவிக்க இயலும்.

இது முடியுமா என சந்தேகம் வரலாம், ஆனால் இதற்கும் ஒரு முன்னுதாரண சம்பவம் இந்தியாவில் உண்டு.

பெருபாரி வழக்கு:

கி.பி 1947 ,ஆகஸ்ட்-15 இல் இந்தியா சுதந்திரமடைந்ததாக அறிவிக்கப்பட்டப்போது, இந்தியா-பாகிஸ்தான் எல்லையே முழுமையாக வரையறுக்கப்படவில்லை, எனவே நன்கு தெளிவான எல்லைகள் கொண்ட பகுதிகளை மட்டும் சரியாக குறிப்பிட்டு பிரித்துக்கொண்டு , மற்றவற்றை பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.

மேலும் பாகிஸ்தான் மேற்கு,கிழக்கு என இரண்டுப்பிரிவாக உருவாகி இருந்தது. இதில் கிழக்கு பாகிஸ்தானுக்கும், மேற்கு வங்கத்துக்கும் சரியாக எல்லை பிரிக்காத சூழல்.

அப்பொழுது மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி மாவட்டத்தின் ஒரு பகுதியாக பெருபாரி வட்டம் இருந்தது,இதில் ஒரு பகுதி ,கிழக்கு பாகிஸ்தான் என அறியப்பட்ட பகுதிக்குள் நீட்டிக்கொண்டு இருந்தது,அதே போல சில தனி தீவுகளாக கிழக்கு பாகிஸ்தானின் பகுதிகள் மேற்குவங்கத்தில் இருந்தன. அதாவது மதத்தின் அடிப்படையில் எந்த நாட்டில் சேர்வது என மக்களை முடிவெடுக்க சொல்லி பிரித்ததால் மேற்கு வங்க எல்லைக்குள் அமைந்த சில வட்டங்கள் மட்டும் கிழக்கு பாகிஸ்தானுடன் இணைந்துக்கொண்டன,ஆனால் அவர்களுக்கு நிலவியல் ரீதியாக கிழக்கு பாகிஸ்தானுடன் தொடர்பேயில்லை, இவ்வாறு தனித்தீவா ஒரு நாட்டுக்குள் இன்னொரு நாட்டின் பகுதி இருப்பதை என்கிளேவ் என்பார்கள்.

இந்த என்கிளேவில் வசிக்கும் கிழக்கு பாகிஸ்தானியர் அவர்கள் நாட்டுக்கு செல்ல பெருபாரி வட்டம் வழியாகத்தான் செல்ல வேண்டும்,ஆனால் அது இந்திய நிலப்பரப்பு என்பதால் ,ஒவ்வொரு முறை செல்லவும்,விசா நடைமுறையினைப்பின்ப்பற்ற வேண்டும்.

எனவே பாகிஸ்தான் அரசு பெருபாரி வட்டத்தில் பாதி எங்களுக்கு சொந்தம், எல்லைக்கோட்டினை வரையருக்கும் முன்னரே பெருபாரி வட்டம் இந்தியாவுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டதால் தான் இப்பிரச்சினை,எனவே பெருபாரியை கொடுங்கள் எனக்கேட்க ஆரம்பித்தார்கள்.

சமாதான பிறா ச்சே புறா விரும்பியான நேருவுக்கு அண்டை நாட்டுடன் சர்ச்சை வேண்டாம் என ரொம்ப நல்ல மனசு,இத்தனைக்கும் பாகிஸ்தான் காஷ்மீர் சண்டை எல்லாம் போட்டிருந்தது,ஆனாலும் பாகிஸ்தான் நம்ம சகோதர நாடு என பெருபாரியை எடுத்துக்கோங்க என சொல்லி ஒப்பந்தம் போட்டுக்கொடுத்துட்டார்.

(Dr.Bidan chandra roy)

இது நடந்தது 1951 இல்,அப்பொழுது மேற்குவங்கத்தினை ஆண்டதும் காங்கிரஸ் கட்சியே,அதன் முதல்வராக டாக்டர்.பிசி.ராய் என்ற மூத்த காங்கிரஸ் தலைவர் இருந்தார். அவர் மற்ற காங்கிரஸ் தலைவர்கள் போல தலையாட்டி பொம்மையல்ல, அது எப்படி மேற்கு வங்க மாநிலத்துக்கு சொந்தமான நிலத்தினை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்கலாம்,இதைப்பற்றி எங்கக்கிட்டே ஒரு வார்த்தை கூட கேட்கலையேனு கடுப்பாகிட்டார், ஒப்பந்தம் எல்லாம் செல்லாது, ரத்து செய்யுங்கள்னு நேருவிடம் சொல்லிப்பார்த்தார், நான் தேசிய தலைவர், நீர் மாநில முதல்வர் எனக்கே அறிவுரையா சொல்லுறீர்னு நேரு கண்டுக்கவேயில்லை போல.

பி.சி.ராயும் விடுவதாக இல்லை உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கை மத்திய அரசுக்கு எதிராகவே போட்டுவிட்டார், அதற்கு அடிப்படை நாம் முன்னர் பார்த்த அரசியல் நிர்ணய சட்டமே, பெருபாரியை வெறும் ஒப்பந்தத்தின் மூலம் விட்டுக்கொடுத்தது செல்லாது,அப்படி செய்வது அரசியல் நிர்ணய சட்டத்திற்கு விரோதம் என்பதே வாதம்.ஒரே கட்சியாக இருந்தாலும் ,மாநில நலனை கருதி அவ்வாறு செய்தார். வழக்கை வாபஸ் பெற வைக்க நேரு தரப்பும் பல முயற்சிகள் செய்து பார்த்தது, ஆனால் பி.சி.ராய் மசியவேயில்லை, அவரை முதல்வர் பதவியில் இருந்து தூக்கலாம்னாலும் அதுவும் முடியலை,எல்லா எம்.எல்.ஏக்களும் பி.சி.ராய் பக்கமே,போதாக்குறைக்கு மக்களும் பலத்த ஆதரவு,மத்திய அரசுக்கு ஆப்பசைத்த குரங்கு நிலைமை, சொந்த கட்சியையே சமாளிக்க முடியலை,பாகிஸ்தானிடமும் திரும்பி கேட்க முடியலை.

1951 இல் போட்ட வழக்கு ,அப்படி இப்படினு இழுத்து 1960 இல் உட்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. இந்திய அரசின் தலைமைப்பொறுப்பில் உள்ளவருக்கு அதிகாரம் இருக்கு,ஆனால் வெறும் ஒப்பந்தம் மூலமாக எல்லாம் விட்டுக்கொடுக்க முடியாது, ஏற்கனவே அரசியல் நிர்ணய சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட சட்ட திருத்த வழியை தான் பின்ப்பற்றனும் என்பதே தீர்ப்பாகும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு:

//the Agreement cannot be implemented by a law
relatable to Art. 3 and legislation relatable to Art. 368
would be inevitable.
It follows, therefore, that the Parliament acting under Art.
368 can make a law to give effect and implement the
Agreement in question covering both Berubari and the
Enclaves or pass a law amending Art. 3 so as to cover cases
of cession of the territory of India and thereafter make a
law under the amended Art. 3 to implement the Agreement.//

(Nehru and V.Krishna menon)

நேரு அப்பொழுதும் பிரதமராகத்தான் இருந்தார், ஆனால் சட்டத்திருத்தம் கொண்டு வந்தால் அதனை பி.சி.ராய் எதிர்க்கட்சிகளுடன் கூட்டணி வைத்து தோற்கடிக்க கூடும் என கருதினார்,ஏன் எனில் அப்பொழுது மற்றக்கட்சிகளும் பி.சி.ராய்க்கு தான் ஆதரவு, அப்பொழுது பி.ஜேபியின் முன்னோடியான ஜனசங்கம், மற்றும் சட்ட மேதைகள்,மற்ற சிறிய கட்சிகள் எல்லாம் வழக்கில் தங்களையும் ஒரு வாதியாக சேர்க்க சொல்லி ,மத்திய அரசுக்கு எதிராக வாதாடி வந்தன. இதனால் நேருவுக்கு நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் செய்து பெருபாரி பகுதியை பாகிஸ்தானுக்கு விட்டுக்கொடுக்க தயக்கம்,எனவே உச்சநீதிமன்ற தீர்ப்பை காரணம் சொல்லி பாகிஸ்தானுடன் செய்த ஒப்பந்தத்தினை ரத்து செய்து விட்டார்.

அன்னிய நாட்டுக்கு விட்டுக்கொடுக்கப்பட்ட நிலப்பரப்பினை சட்ட போராட்டத்தின் மூலம் ஒரு மாநில முதல்வர் நினைத்தால் மீட்க முடியும் என்பதற்கு நல்ல முன்னுதாரணமாக இச்சம்பவம் அமைந்துவிட்டது.

இப்படி லட்டு மாதிரி நல்ல முன்னுதாரண சம்பவம் இருந்தும் 1974 இல் கட்சத்தீவை விட்டுக்கொடுத்தப்போது தமிழகத்தினை ஆண்ட தி.முக அரசு என்ன செய்தது, மஞ்சத்துண்டு என்ன செய்தார் எனப்பார்ப்போம்.

கொஞ்சம் விரிவாகவே அக்கால திமுக-காங்கிரஸ் உறவைப்பார்ப்போம்,

அண்ணா அவர்கள் தலைமையில் திமுக இந்தி எதிர்ப்பு என்ற பிரச்சாரத்தை முன் வைத்தே அரசியல் செய்து வந்தது, தமிழைக்காக்க ,தமிழர் உரிமையை நிலைநாட்ட காங்கிரசை விரட்ட வேண்டும் என்று சொல்லி தான் அரசியல் செய்து வந்தார்.

1967 இல் நடந்த பொது தேர்தலிலும் இதுவே கொள்கையாக இருந்தது, காங்கிரசை கடுமையாக எதிர்த்தார்கள், தேர்தலில் வென்று ஆட்சி அமைப்போம் என அண்ணாவுக்கே நம்பிக்கை இல்லை போலும் சட்டமன்றத்திற்கு போட்டியிடாமல் ,நாடாளுமன்றத்துக்கு தென் சென்னை தொகுதியில் போட்டியிட்டார்.

இந்தி எதிர்ப்பு,மாணவர் போராட்டம் ஆகியவற்றோடு, அக்காலக்கட்டத்தில் எம்.ஆர்.ராதா ,எம்ஜிஆரை சுட்ட சம்பவமும் சேர்ந்துக்கொள்ள ,கழுத்தில் கட்டுப்போட்ட எம்ஜிஆர் போஸ்டரை ஒட்டி அனுதாப அலையை வீச செய்தார்கள், எல்லாம் சேர்ந்து காங்கிரசை வீழ்த்த உதவியது.

மாநில சட்ட சபைக்கும்,நாடாளுமன்றத்திற்கும் நடைப்பெற்ற தேர்தலில் தி.முக அமோக வெற்றி,

சட்ட சபை- 137 இடங்கள்,தனிப்பெரும்பான்மை.

நாடாளுமன்றம்- 25 இடங்கள்.

இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ,இந்தியா முழுக்க வெறும் 283 இடங்களே வென்றது, ஆட்சி அமைக்க 273 இடங்கள் போதும் என்றாலும், 283 எம்பிக்களை வைத்துக்கொண்டு நாடாளுமன்றத்தில் எந்த சட்டமும் இயற்ற முடியாது, கிட்டத்தட்ட "மைனாரிட்டி அரசு" நிலை தான்.

இந்நிலையில் தி.மு.க என்ன செய்தது என்றால், யாரை எதிர்த்து அரசியல் செய்தார்களோ அவர்களுடனே தேர்தல் முடிந்தவுடன் கூட்டணி வைத்துவிட்டார்கள்,காங்கிரசுக்கு தனது 25 எம்பிக்களும் நிபந்தனை அற்ற ஆதரவு வெளியில் இருந்தே அளிப்பதாக அண்ணா அறிவித்துக்கூட்டணி ஒன்றை உருவாக்கிவிட்டார். பின்னர் 1969 இல் அண்ணா மறைவுக்கு பின்னர் முதல்வரான கலைஞரும் கூட்டணி உறவை அப்படியே தக்க வைத்துக்கொண்டார்.

இப்படிப்பட்ட அரசியல் கொள்கையாளர்களுக்காக எளிமையும்,நேர்மையின் வடிவமான தமிழக காங்கிரஸ் தலைவரான காமராஜரையே தமிழக மக்கள் தோற்கடித்தார்கள் என்றால் அக்காலத்தில் காங்கிரஸ் மீது எத்தகைய வெறுப்புணர்வு திமுகவால் தூண்டி வளர்க்கப்பட்டு வந்தது என உணரலாம்.அதெல்லாம் தேர்தல் முடியும் வரையில் தான் ஆட்சிக்கு வந்ததும்,நட்புறவு :-))

அதன் பின்னர் 1971 இல் மீண்டும் பொது தேர்தல் வந்த போது , கலைஞர் தலைமையிலான திமுகவும்,இந்திராக்காந்தி தலைமையிலான இந்திரா காங்கிரசும் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. இதற்கிடையில் காங்கிரஸ் இரண்டாக உடைந்து ,காங்கிரஸ்-ஓ, காங்கிரஸ் ஐ என பிரிந்த கதை எல்லாம் நடந்துவிட்டது.எனவே இந்திரா தலைமையிலான காங்கிரஸ் வலிமையிழந்தே இருந்தது ஆனாலும் தி.மு.க விசுவாசமாக முட்டுக்கொடுத்து வந்தது.

1971 பொதுத்தேர்தலிலும் இந்திரா காங்கிரஸ்- திமுக கூட்டணி அமோக வெற்றிப்பெற்றது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி,மாநிலத்தில் தி.முக ஆட்சி, தி.முகவுக்கு 28 எம்பிக்கள் வேறு கிடைத்திருந்தார்கள், அமோக செல்வாக்குடன் ஆட்சிக்கு இரண்டாவது முறையாக கலைஞர் வந்தார். வழக்கம் போல மத்தியில் இந்திராவுக்கு நிபந்தனையற்ற ஆதரவும் கொடுத்திருந்தார்.

இப்படியான அதி அற்புத கூட்டணி உறவு இருக்கும் சூழலில் தான் 1974 இல் தமிழகத்திற்கு சொந்தமான கட்சத்தீவை முன்னரே பார்த்த அரசியல் காரணத்திற்காக இலங்கைக்கு இந்திரா காந்தி தாரை வார்த்தார், கூட்டணியில் பசைப்போட்டு ஒட்டியிருந்த கலைஞர் என்ன செய்திருக்கணும்?

சும்மா பேச்சுக்கு நாடாளுமன்றத்தில் நாஞ்சில்.மனோகரனை விட்டு கண்டனம் தெரிவித்தார், அப்போது நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக உறுப்பினரான ராமநாத புரம் எம்பி மற்றும் ஃபார்வர்ட் பிளாக் கட்சி எம்பி.பாரதிய ஜனதாக்கட்சியின் அடல்பிகாரி வாஜ்பாயி எல்லாம் கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.

அடுத்த நாளே, இந்திராகாந்தி,வெளியுறவு துறை அமைச்சர் ஸ்வரன் சிங்குடன் ஆலோசித்து, வெளியுறவு செயலாளர் கேவல் சிங்க் என்பவரை தமிழகத்துக்கு அனுப்பினார், அவர் என்ன பேசினாரோ கலைஞரின் சுருதி அமுங்கிப்போச்சு :-))

காரணமில்லாமல் ஒன்றும் கலைஞர் அடக்கி வாசிக்கவில்லை, எப்பொழுதுமே ஒரு கொண்டான் கொடுத்தான் கொள்கையை வைத்திருப்பார் மஞ்சத்துண்டு,தான் ஒன்றை விட்டுக்கொடுத்தால் அதற்கு ஒன்றை பெற்று விடுவார்.

அப்பொழுது கலைஞரின் மீது ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன, முக்கியமானது வீராணம் திட்ட ஊழல் ஆகும்,வீராணம் திட்டத்தினை ஒப்பந்தம் எடுத்தசத்தியநாராயண ரெட்டி என்பவர் மர்மமான முறையில் தற்கொலை எல்லாம் செய்துக்கொண்டிருந்தார்,எனவே இது பெரிய அளவில் பிரச்சினைகளை கழகத்திற்கு உருவாக்கியிருந்தது. வீராணம் திட்டம் குறித்து விசாரனைக்கமிஷன் அமைக்க வேண்டும் என தி.முக.வை விட்டுப்பிரிந்து தனிக்கட்சிக்கண்ட எம்ஜிஆர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்த நேரம், எங்கே மத்திய அரசின் விருப்பத்திற்கு எதிராக பேசினால் ஊழல் குற்றச்சாட்டில் வழக்கோ,இல்லை ஆட்சிக்கலைப்போ வரலாம் என பயந்த கலைஞர் , எனவே வழக்கப்படி தனது கொண்டான் கொடுத்தான் கொள்கைப்படி கச்ச தீவை விட்டுக்கொடுத்தது பற்றி அதிக அழுத்தம் கொடுக்காமல் சட்ட மன்றத்தில் ஒரு தீர்மானம் மட்டும் போட்டுவிட்டு அமைதியாகிவிட்டு,ஊழல் குற்றச்சாட்டினை மத்திய அரசு கிளராமல் பார்த்துக்கொண்டார்.

தீர்க்கமாக எதிர்க்க வேண்டும் என நினைத்திருந்தால் , பி.சிராய் வழியில் ,உச்ச நீதிமன்றத்தில் வழக்குப்போட்டே கச்சத்தீவை மீட்டிருக்கலாம். அல்லது 28 எம்பிக்கள் உள்ள ஒரு கட்சி நாடாளுமன்றத்தினையே கலக்கியிருக்கலாம், எதிர்க்கட்சியான பிஜேபியும் ஆதரவு தர தயாராக இருந்தது எனலாம், ஏன் எனில் அவர்களை பொறுத்தவரையில் கட்சத்தீவு "வாலித்தீவு" ஆகும். ராமனும்,வாலியும் சண்டையிட்டது கட்சத்தீவில் என ராமாயண அடிப்படையில் நம்புகிறார்கள்.

1976 கட்சத்தீவு ஒப்பந்தம்:

1974 இல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடி உரிமை,வலைகாய வைக்கும் உரிமை எல்லாம் இருந்தது,ஆனால் அவ்வுரிமை இலங்கைக்கு பிடிக்கவில்லை,எனவே ஒரு திருத்தம் செய்து ,எல்லா உரிமைகளையும் பறிக்க நினைத்து ,புதிய ஒப்பந்தம் போட்டது,நமது இந்திய அரசும் கொடுத்தது தான் கொடுத்தாச்சு முழுசாவே கொடுப்போம்னு ரொம்ப தாரளமாக அள்ளிக்கொடுத்துவிட்டது,இம்முறை சின்ன எதிர்ப்பு கூட மாநில அரசிடம் இருந்து வரவில்லை,ஏன் எனில் அப்பொழுது நாட்டில் எமர்ஜென்சி அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வளவு தான் மடங்கிப்போனாலும் விடுவதாகயில்லை,எமர்ஜென்சிக்கு எதிர்ப்புக்காட்டினார்கள் எனக்கூறி தமிழகத்தில் ஆட்சிக்கலைப்பு செய்யப்பட்டு மிசாவின் கீழ் உடன்ப்பிறப்புகள் எல்லாம் தர்ம அடியும் வாங்கினார்கள்.

இம்புட்டு நடந்தும் 1981 பொது தேர்தலில் மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக எனக்கூவிய தன்மான சிங்கங்கள் தான் கழகத்தினர் :-))

அதுக்கப்புறம் இன்று வரையிலும் கூட காங்கிரஸுடன் கூட்டணி என வண்டியோட்டியும் கட்சத்தீவு கைவிட்டு போனது போனதாகவே தான் இருக்கிறது,அம்புட்டு தான் மஞ்சத்துண்டின் இராச தந்திரம்.

கட்சத்தீவு மீட்பு சாத்தியமா?

1992 இல் ஆட்சிக்கு வந்த அம்மையார் தலைமையிலான அ.தி.முக ஆட்சியின் போது கட்சத்தீவினை மீட்க சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சட்ட மன்றத்தில் அறிவித்தார்,ஆனால் ஏனோ உடனே நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, 2008 இல் தான்,மேற்கு வங்க பெருபாரி வழக்கின் அடிப்படையில் உட்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அவ்வழக்கு இன்னும் இழுத்துக்கொண்டுள்ளது, இம்முயற்சி சற்றே காலங்கடந்த ஒன்று என்ற போதிலும் சரியான வகையில் கட்சத்தீவு தமிழகத்திற்கு சொந்தமான நிலப்பரப்பு என ஆவணங்களை காட்டி வாதாடினால் தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக வர பெருமளவு வாய்ப்புள்ளது.

சமீபத்தில் கூட வழக்கினை விரைவாக நடத்தி முடிக்க வேண்டும் என உட்சநீதிமன்றத்தில் ஒரு மனுவினை தமிழக அரசு சமர்ப்பித்துள்ளது. அரசியல் ரீதியாக சாதிக்க முடியாததை சட்டப்போராட்டத்தின் மூலம் சாதிக்க முடிகிறதா என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்,நல்ல தீர்ப்பு வர காத்திருப்போம்.

கச்சத்தீவு-மறைக்கப்பட்ட உண்மைகள்!

பகத்சிங் - மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!

காந்தி நினைத்திருந்தால் பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம்... ஆனால்...!

அன்றைக்கும் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு காந்தி மட்டுமே முகமூடியாக தேவைப்பட்டார். காந்திக்கு இணையாக வேறு ஒரு தலைவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையே காந்தியும் விரும்பினார். சுதந்திரப்போராட்ட காலத்தில், தனக்கு நிகராகவோ அல்லது தன்னை விட அதிகமாகவோ வேறு ஒரு தலைவர் வளர்வதை காந்தி விரும்பமாட்டார் . அதனால் தான் பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் அம்பேத்கர் போன்ற தேசத்தலைவர்களை விலக்கியே வைத்திருந்தார். இவர்களெல்லாம் வன்முறையாளர்கள் போலவும், அகிம்சைக்கு எதிரானவர்கள் போலவும் சித்தரித்துக்கா ட்டுவார்.

இப்படித்தான் இந்த தேசத்தின் விடுதலையை போராட்டத்தின் மூலமாகவும், புரட்சியின் மூலமாகவும் தான் பெறமுடியும் என்று பிரிட்டிஷாருடன் சினங்கொண்டு போராடிய பகத்சிங் என்ற மாவீரனை இழந்துவிட்டோம். காந்தி நினைத்திருந்தால் அன்றைக்கிருந்த பிரிட்டிஷ் அரசுடன் பேசி பகத்சிங்கை தூக்குமேடையிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். அதைத்தான் அன்றைக்கு நாட்டில் பலரும் எதிர்ப்பார்த்தா ர்கள். இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல தலைவர்களும் தொண்டர்களுமே எதிர்ப்பார்த்தா ர்கள்.
இதை புரிந்துகொண்ட காந்தி, 1931 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கராச்சியில் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டிலும் இந்த பிரச்சனை எதிரொலிக்கும் என்று எதிர்ப்பார்த்தார். மாநாட்டில் கலந்துகொள்பவர்க ள் பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றுங்கள் என்று தன்னை நிர்பந்தம் செய்வார்கள் என்று முன் கூட்டியே அறிந்துகொண்டார் . அப்படி நடக்கும் பட்சத்தில் அவர்கள் கட்டளைப்படி, தான் பிரிட்டிஷ் அரசிடம் பேசி பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டி வரும் என்பதை உணர்ந்தார்.அப்படியெல்லாம் ஒன்றும் நடந்துவிடக்கூடா து என்பதில் காந்தி தீவிரம் காட்டினார்.

அதனால் அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய் இர்வினை ( Irwin) சந்தித்து, கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன் பகத்சிங்கை தூக்கில் போடும்படி கேட்டுக்கொண்டவர் தான் ''மகாத்மா'' என்று சொல்லக்கூடிய காந்தி என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அதனால் தான்பிரிட்டிஷ் அரசாங்கம் கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களை தூக்கிலிட முடிவு செய்து, 1931 மார்ச் மாதம் 24 - ஆம் தேதியை தூக்கிடும் தேதியாக அறிவித்தது.

ஆனால் அந்த 24 - ஆம் தேதிவரைக் கூட காத்திருக்க முடியாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவர்களை தூக்கிலிடுவதற்கு துடித்தார்கள். அதனால் 23 - ஆம் தேதியே இரவு 7.04 மணிக்கே வழக்கத்திற்கு மாறாக - மரபுக்கு மாறாக மூவரையும் தூக்கிலிட்டார்கள்.

வழக்கமாக தூக்கு தண்டனை என்பது விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே நிறைவேற்றுவது தான் மரபு. ஆனால் அந்த மரபைக்கூட அன்றைய ஆட்சியாளர்கள் மீறினார்கள் என்பது குறிப்பிடத்தக்க து. 24 - ஆம் தேதி விடியற்காலை தூக்கிலிட வேண்டியவர்களை 23 - ஆம் தேதி இரவே அவசர அவசரமாக தூக்கிலிட்டனர். பகத்சிங்கை கொல்வதில் காந்தியை விட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இன்னும் ஒரு மடங்கு வேகம் காட்டினர்.

லாகூர் சிறையிலிருந்த பகத்சிங்கை தூக்கிலிடுவதற்கு தயார்படுத்துவதற்காக சிறைக்காவலர்கள் முன் கூட்டியே 23 - ஆம் தேதி மாலையே அழைத்தார்கள். மறுநாள் தான் தூக்கு தண்டனை என்று அறிந்திருந்த பகத்சிங், முன்கூட்டியே முதல் நாளே தூக்கிலிடப் போகிறார்கள் என்பதைஅறிந்திருக்கவில்லை. அதனால் காவலர்கள் அழைத்த போது, '' நான் இங்கே ஒரு போராளியுடன் உரையாடிக்கொண்டி ருக்கிறேன். அதனால் தொந்தரவு செய்யாதீர்கள்'' என்று சிறைக்குள்ளிருந்து குரல்கொடுக்கிறார். வேறு யாரோ போராளி சிறைக்குள்ளே புகுந்து இருவரும்ஏதோ திட்டம் தீட்டுகிறார்களோ என்று காவலர்கள் பயந்துவிட்டனர். சிறிது நேரம் கழித்து அவரே வெளியே வருகிறார். உள்ளே பார்த்தால் அவரோடு வேறு யாரும் இல்லை. ஆனால் அவர் கையில் ஒரு புத்தகம் இருந்தது. மாமேதை லெனின் எழுதிய '' அரசும் புரட்சியும் '' ( STATE AND REVOLUTION ) என்ற புத்தகம் தான்அது. அதுவரையில் அந்த புத்தகத்தைபடித்துக்கொண்டி ருந்ததால், நான்ஒரு போராளியுடன் உரையாடிக்கொண்டி ருக்கிறேன் என்று சொன்னார்.

அந்த புத்தகத்தை காவலர்கள் வாங்கிப்பார்த்த போது, அந்த புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் '' இந்த புத்தகத்தை இந்திய மக்கள் அனைவரும் படிக்கவேண்டும் '' என்று எழுதி கையெழுத்திட்டிருந்தார். இது தான் இந்திய மக்களுக்கு அவர் கடைசியாக விடுத்த வேண்டுகோள்!"  காந்தி நினைத்திருந்தால் பகத்சிங்கை காப்பாற்றியிருக்கலாம்... ஆனால்...!

அன்றைக்கும் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு காந்தி மட்டுமே முகமூடியாக தேவைப்பட்டார். காந்திக்கு இணையாக வேறு ஒரு தலைவரை ஏற்றுக்கொள்ளவில்லை. இதையே காந்தியும் விரும்பினார். சுதந்திரப்போராட்ட காலத்தில், தனக்கு நிகராகவோ அல்லது தன்னை விட அதிகமாகவோ வேறு ஒரு தலைவர் வளர்வதை காந்தி விரும்பமாட்டார் . அதனால் தான் பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், டாக்டர் அம்பேத்கர் போன்ற தேசத்தலைவர்களை விலக்கியே வைத்திருந்தார். இவர்களெல்லாம் வன்முறையாளர்கள் போலவும், அகிம்சைக்கு எதிரானவர்கள் போலவும் சித்தரித்துக்கா ட்டுவார்.

இப்படித்தான் இந்த தேசத்தின் விடுதலையை போராட்டத்தின் மூலமாகவும், புரட்சியின் மூலமாகவும் தான் பெறமுடியும் என்று பிரிட்டிஷாருடன் சினங்கொண்டு போராடிய பகத்சிங் என்ற மாவீரனை இழந்துவிட்டோம். காந்தி நினைத்திருந்தால் அன்றைக்கிருந்த பிரிட்டிஷ் அரசுடன் பேசி பகத்சிங்கை தூக்குமேடையிலிருந்து காப்பாற்றியிருக்க முடியும். அதைத்தான் அன்றைக்கு நாட்டில் பலரும் எதிர்ப்பார்த்தா ர்கள். இன்னும் சொல்லப்போனால் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல தலைவர்களும் தொண்டர்களுமே எதிர்ப்பார்த்தா ர்கள்.

இதை புரிந்துகொண்ட காந்தி, 1931 - ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கராச்சியில் நடைபெறவிருக்கும் காங்கிரஸ் மாநாட்டிலும் இந்த பிரச்சனை எதிரொலிக்கும் என்று எதிர்ப்பார்த்தார். மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றுங்கள் என்று தன்னை நிர்பந்தம் செய்வார்கள் என்று முன்கூட்டியே அறிந்துகொண்டார் . அப்படி நடக்கும் பட்சத்தில் அவர்கள் கட்டளைப்படி, தான் பிரிட்டிஷ் அரசிடம் பேசி பகத்சிங்கை தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்ற வேண்டி வரும் என்பதை உணர்ந்தார்.அப்படியெல்லாம் ஒன்றும் நடந்துவிடக்கூடா து என்பதில் காந்தி தீவிரம் காட்டினார்.

அதனால் அன்றைய பிரிட்டிஷ் வைஸ்ராய் இர்வினை ( Irwin) சந்தித்து, கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு முன் பகத்சிங்கை தூக்கில் போடும்படி கேட்டுக்கொண்டவர் தான் ''மகாத்மா'' என்று சொல்லக்கூடிய காந்தி என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அதனால் தான்பிரிட்டிஷ் அரசாங்கம் கராச்சி காங்கிரஸ் மாநாட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பே பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் போன்றவர்களை தூக்கிலிட முடிவு செய்து, 1931 மார்ச் மாதம் 24 - ஆம் தேதியை தூக்கிடும் தேதியாக அறிவித்தது.

ஆனால் அந்த 24 - ஆம் தேதிவரைக் கூட காத்திருக்க முடியாமல் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அவர்களை தூக்கிலிடுவதற்கு துடித்தார்கள். அதனால் 23 - ஆம் தேதியே இரவு 7.04 மணிக்கே வழக்கத்திற்கு மாறாக - மரபுக்கு மாறாக மூவரையும் தூக்கிலிட்டார்கள்.

வழக்கமாக தூக்கு தண்டனை என்பது விடியற்காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே நிறைவேற்றுவது தான் மரபு. ஆனால் அந்த மரபைக்கூட அன்றைய ஆட்சியாளர்கள் மீறினார்கள் என்பது குறிப்பிடத்தக்க து. 24 - ஆம் தேதி விடியற்காலை தூக்கிலிட வேண்டியவர்களை 23 - ஆம் தேதி இரவே அவசர அவசரமாக தூக்கிலிட்டனர். பகத்சிங்கை கொல்வதில் காந்தியை விட பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இன்னும் ஒரு மடங்கு வேகம் காட்டினர்.

லாகூர் சிறையிலிருந்த பகத்சிங்கை தூக்கிலிடுவதற்கு தயார்படுத்துவதற்காக சிறைக்காவலர்கள் முன் கூட்டியே 23 - ஆம் தேதி மாலையே அழைத்தார்கள். மறுநாள் தான் தூக்கு தண்டனை என்று அறிந்திருந்த பகத்சிங், முன்கூட்டியே முதல் நாளே தூக்கிலிடப் போகிறார்கள் என்பதைஅறிந்திருக்கவில்லை. அதனால் காவலர்கள் அழைத்த போது, '' நான் இங்கே ஒரு போராளியுடன் உரையாடிக்கொண்டி ருக்கிறேன். அதனால் தொந்தரவு செய்யாதீர்கள்'' என்று சிறைக்குள்ளிருந்து குரல்கொடுக்கிறார். வேறு யாரோ போராளி சிறைக்குள்ளே புகுந்து இருவரும்ஏதோ திட்டம் தீட்டுகிறார்களோ என்று காவலர்கள் பயந்துவிட்டனர். சிறிது நேரம் கழித்து அவரே வெளியே வருகிறார். உள்ளே பார்த்தால் அவரோடு வேறு யாரும் இல்லை. ஆனால் அவர் கையில் ஒரு புத்தகம் இருந்தது. மாமேதை லெனின் எழுதிய '' அரசும் புரட்சியும் '' ( STATE AND REVOLUTION ) என்ற புத்தகம் தான்அது. அதுவரையில் அந்த புத்தகத்தை படித்துக் கொண்டி ருந்ததால், நான்ஒரு போராளியுடன் உரையாடிக்கொண்டி ருக்கிறேன் என்று சொன்னார்.

அந்த புத்தகத்தை காவலர்கள் வாங்கிப்பார்த்த போது, அந்த புத்தகத்தின் கடைசிப் பக்கத்தில் '' இந்த புத்தகத்தை இந்திய மக்கள் அனைவரும் படிக்கவேண்டும் '' என்று எழுதி கையெழுத்திட்டிருந்தார். இது தான் இந்திய மக்களுக்கு அவர் கடைசியாக விடுத்த வேண்டுகோள்!

பகத்சிங் - மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..!



இளவரசன் மரணம்

கொலையா, தற்கொலையா?
இளவரசன் சாவு
எங்கே நிகழ்ந்தது, எப்படி நடந்தது?
இளவரசன் மறைவு
குறித்தக் கேள்விகள் இவையல்ல!
இளவரசன் முழுமை
பாதியிலேயே பறிக்கப்பட்டது ஏன்?

சாதி வெறி, பதவி வெறி,
நாற்காலி வெறி, அதிகார வெறி,
தன் குடும்பம் தரணியாளும் வெறி!
தன் பெண்டு பிள்ளைகள் சக்தி பெரும் வெறி!
தான் இறவாமையோடு என்றென்றும் வாழும் வெறி!

இளவரசனை
யார் கொன்றார்கள்?
எதற்காகக் கொன்றார்கள்?
கொன்றவருக்குத் தண்டனை என்ன?
இந்தக் கேள்விகளுக்கான விடைகள்
இங்கிருப்போர் எல்லோரும் அறிவர்:
அமைதி, மவுனம், நிசப்தம்!

தமிழனுக்கு என்ன இழவுடா நடக்கிறது?
தமிழினத்தைக் கொல்கிறார்கள்!
அங்கே பிறிதோரினம் நடத்தும் இனப்படுகொலையில்
கொத்துக் கொத்தாக, கூட்டங் கூட்டமாக!
இங்கே தன்னினமே நடத்தும் ஈனப் படுகொலையில்,
ஒவ்வொரு திவ்யாவாக, ஒவ்வொரு இளவரசனாக!
நட்ட நடுப் பகலில், நாற்சந்தியில்,
நம் அனைவரின் கண் முன்னால்,
நம் மவுனத்தின் உதவியுடன்!

தம்பி,
வெறும் உணர்வுகளையும்
வெற்று வார்த்தைகளையும்
மட்டும் கோர்த்துக் கொண்டிருக்கும்
கையாலாகாத என்னை
மன்னித்துக் கொள்!
தமிழனாய்ப் பிறந்தது
நம் தவறு!
அமைதி கொள்!!

சுப. உதயகுமாரன்

ஈனப் படுகொலை – சுப. உதயகுமாரன்

எப்போதாவது செய்தித்தாள்களில், விமான நிலையங்களில் கேட்டமைன் பிடிபடும் செய்திகளைப் படிக்கிறோம். அது என்ன கேட்டமைன்?

கேட்டமைன் - ஹெராயின், அபின், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் எமன். ஹெராயின், அபின், கஞ்சா, மது ஆகிய போதைப் பொருட்களுக்கு மூலப் பொருள் இயற்கையான விளைபொருட்களே. ஆனால், கேட்டமைன் முழுக்க, முழுக்க ரசாயனப் பொருள். உண்மையில் இது கால்நடைகளுக்கு ஏற்படும் உயிர்க்கொல்லி நோயான ஆந்தராக்ஸ் முற்றிய நிலையில் கடைசி யாக உயிர் காக்கும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் கால் நடை மருந்து. தவிர, ஆபத்தான வலி நிவாரணி மருந்தும்கூட. பார்க்க சர்க்கரை போலவே பளபளப்பாக வெண்மை நிறத்தில் இருக்கும். இதன் உண்மையான வேதியியல் பெயர் க்ளோரோபைனல் மெத்லோமினா சைக்ளோஹெக்ஸானோன். பெயரை உச்சரிக்கவே வாய் தடுமாறுகிறதா? உள்ளே சென்றால் சகலமும் தடுமாறும்.

வரலாற்றில் நீண்ட காலம் வெளிவராமல் இருந்த கேட்டமைன் போதை ரகசியம் வெளியானது வியட்நாம் போரின்போதுதான். அமெரிக்க வீரர்கள் இந்த மருந்தை ஊசி மூலம் உள்ளே செலுத்திக்கொண்டு ஒருமுகப்படுத்தப்பட்ட வெறிகொண்ட மனநிலையில் போரிட்டார்கள். ஒரு கட்டத்தில் இந்த ரகசியத்தை வியட்நாம் வீரர்கள் கண்டுபிடித்துவிட்டார்கள். ஆனால், அவர்கள் புத்திசாலித்தனமாகத் தாங்கள் கேட்டமைனைப் பயன்படுத்திக்கொள்ளாமல் குதிரையின் கால்களில் இந்த மருந்தை ஊசி மூலம் செலுத்தினார்கள். அப்புறம் என்ன, குதிரைகள் பேய்ப் பாய்ச்சல் பாய்ந்தன.

இந்தியாவில் ஹெராயின், அபின், கஞ்சா போன்ற அண்டர்கிரவுண்ட் பிசினஸ்களை எல்லாம் தூக்கிச் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக்கொண்டு இருக்கிறது கேட்டமைன் பிசினஸ். வட அமெரிக்காவுக்கு அடுத்து போதை உலகில் கேட்டமைன் அதிகம் நுகரப்படுவது இந்தியாவில்தான். இந்தியாவில் மும்பைக்கு அடுத்ததாக கேட்டமைன் கடத்தல் மையமாக சக்கைப்போடு போடுவது... சென்னையில்! ஓர் ஆண்டில் சராசரியாக சென்னை விமான நிலையத்துக்கு வந்துபோகிறவர்கள் 12 மில்லியன் மக்கள். இதில் 4 சதவிகிதம் பேர் கேட்டமைன் போதைப் பொருளைக் கடத்துகிறார்கள். 'கஸ்டம்ஸ் மற்றும் டிரக் கமிஷன் ஆஃப் இந்தியா' இணைந்து சமீபத்தில் வெளியிட்ட அதிர்ச்சி அறிவிப்பு இது!

கடந்த இரண்டு ஆண்டுகளில் சென்னை விமான நிலையத்தில் பிடிபட்ட கேட்டமைன் அளவு சுமார் ஒன்றரை டன்னை நெருங்குகிறது. ஒரு கிலோ கேட்டமைனின் இண்டர்நேஷனல் மதிப்பு எவ்வளவு தெரியுமா? 10 லட்சம். இந்தியாவில் மும்பையில்தான் ஒட்டுமொத்த கேட்டமைனும் உற்பத்தி செய்யப்படுகிறது. போதைப் பிரிவுக் கடத்தல் தடுப்பு அதிகாரி ஒருவரிடம் பேசினேன்.

''மும்பையில் சுமார் 4,000 மருந்துத் தொழிற்சாலைகள் இருக்கின்றன. 24 மணி நேரமும் செயல்படும் இந்த நிறுவனங்களில் பல நிறுவனங்கள், பகுதி நேரமாக கேட்டமைன் உற்பத்தியில் ஈடுபடு கின்றன. உயிர் காக்கும் மருந்துகள், வலி நிவாரணி மருந்துகள், விட்டமின் மருந்துகள் ஆகியவற்றுக்குப் பயன்படுத்தும் அடிப்படையான ரசாயனப் பொருளே இதற்கும் பயன்படுத்தப்படுவதால், இதை மருந்து ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பது சிரமம். பெரும்பாலும் மைதா மாவு பாக்கெட்டுகள், ஹேர் டை பாக்கெட்டுகள், மிக்ஸி, கிரைண்டர் உட்பகுதிகள், வெங்காய மூட்டைகள் ஆகியவற்றில் மறைத்து வைத்துக் கடத்துகிறார்கள்.

என்னதான் விமான நிலையத்தில் கடத்தல்காரனை மடக்கி, கேட்டமைனைக் கைப்பற்றினாலும் முக்கியக் குற்றவாளி பிடிபட்டதாக சரித்திரம் கிடையாது. ஏனெனில், பிடிபட்டவன் கட்டாயம் 50 அல்லது 60-வது கையாளாக இருப்பான்'' என்றார் அவர்.

இதை எப்படி எல்லாம் பயன் படுத்துகிறார்கள்? சென்னையில் அடிக்கடி பப்களுக் குச் செல்லும் வக்கீல் நண்பர் ஒருவர் சொல்வதைக் கேளுங்கள். ''கேட்டமைன் இல்லாத சென்னை பப்களுக்கு மரியாதையே கிடையாது. கேட்டமைனை வாயால் உட்கொள்ள முடியாது. சென்னை பப்களில் கூல்டிரிங்ஸ் பாட்டிலின் மூடியில் பாதி அளவு கேட்டமைனின் விலை ஒரு லட்சம். இது ஐந்து டோஸ் அளவு. அதாவது ஐந்து பேர் கூட்டாகச் சேர்ந்து வாங்கிக்கொள்ளலாம். டாஸ்மாக் கடையில் கட்டிங் வாங்கும் நபருக்காகக் காத்திருப்பதுபோல பப்களிலும் ஒரு டோஸ், இரண்டு டோஸ் கேட்டமைன் வாங்கும் நபர் களுக்காகக் காத்திருப்பதைப் பார்க்கலாம்.

'மிகக் குறைந்த அளவாக மூன்று மில்லிகிராம் கேட்டமைனைத் தொடர்ந்து ஒருவர் ஓர் ஆண்டு எடுத்துக்கொண்டால், மாயத் தோற்றம், மனக்குழப்பம், தூக்கத்தில் நடப்பது, உயர் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு இவை எல்லாம் அதிகரித்து உயிர் பிரிவது 100 சதவிகிதம் கேரண்டி’ என்கிறார்கள் மருத்துவர்கள்!

கேட்டமைன் ((KETAMINE) என்னும் போதை எமன்!

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்


மறைக்கப்பட்ட இந்திய வரலாறு..! இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யார் ? இந்தியர்களே நன்றி மறப்பது நன்றன்று !!! இந்தியாவிற்கு சுதந்திரம் அடைய காரணமானவர் மாவீரன் சுபாஷ் சந்திரபோஸ் தான் . அவரது அர்ப்பணிப்பும் தியாகமும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பட வேண்டியவை திட்டமிட்டு மறைக்க பட்டுவிட்டது .இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தது யாரோ ?அந்த பேரையும் புகழையும் அனுபவிப்பது யாரோ?

சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு .அகிம்சை முறையில் போராடி கொண்டு இருந்த காந்தியிடம் சந்திரபோஸ் சொன்னார் . அகிம்சை முறையில் போராடினால் பல ஆண்டுகளாக இந்த போராட்டம் இழுத்து கொண்டே போகும் . கோடிகணக்கான இந்தியர்களை வெறும் இருபதாயிரம் வெள்ளையனைக் கொண்ட ராணுவம் அடிமை படுத்தி வைத்து இருக்கிறாது . ஏன் அந்த ராணுவத்தை அடித்து விரட்ட கூடாது . அவர்களை நான் ஆயுத ரீதியாக எதிர்கொள்ள திட்ட மிட்டு இருக்கிறேன் . உங்களின் கருத்து என்ன என்று காந்தியிடம் கேட்ட போது அகிம்சையை போதிக்கும் நான் இதை ஒருநாளும் ஏற்று கொள்ள மாட்டேன் என்று சொன்னார் . இருவருக்கும் நிறைய கருத்து மோதல் வந்த பின்னர் சந்திரபோஸ் அவர்கள் தனித்து போராட தயாராகினார் .

முதல் கட்டமாக தமிழ்நாடுக்கு வந்தார் . வந்து துடிப்பான இளைஞ்சர்களை சந்தித்து . வெள்ளையனை நாம் ஆயுத ரீதியாக தான் எதிர்கொள்ள வேண்டும் அதற்காக நாம் ராணுவ கட்டமைப்பை உருவாக்க வேண்டும் . என்று இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்தார் . பிறகு இதே பிரச்சாரத்தை இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கும் சென்று இளைஞ்சர்களின் ஆதரவை திரட்டினார் . ஆனால் அது அவருக்கு தோல்வியிலே முடிந்தது யாரும் ஆயுதம் எடுத்து போராட முன் வரவில்லை மீண்டும் தமிழகம் வந்த போது .

தமிழகத்தில் உள்ள ஆயிர கணக்கான இளைஞர்கள்
சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் போராட்டதிற்கு ஆதரவளித்தார்கள் . அந்த இளைஞர்களுக் கெல்லாம் மறைமுகமாக பயிற்சி அளிக்கப்பட்டது . தமிழகத்தில் காந்தியின் ஆதரவாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டே போனது . தமிழர்கள் சுபாஷ்சந்திரபோசின் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு ராணுவத்தில் இணைய ஆரம்பித்தார்கள் .

அப்போது சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஆயுத புரட்சி ஒன்று ஆரம்பித்து உள்ளார்கள் என்று வெள்ளையர்களுக்கு தெரியவர . இவர்களை எல்லாம் வெள்ளையர்கள் வேட்டையாட ஆரம்பித்துள்ளார்கள் .

சந்திரபோஸின் இயக்கத்தில் பெரும் தமிழ் இளைஞர்கள் இணைந்து கொண்டதை அறிந்த காந்தியின் ஆதரவாளர்கள் . சுபாஷ் சந்திரபோசை காட்டி கொடுக்கவும் ஆரம்பித்தார்கள். அதனால் அவரால் இந்தியாவில் இருந்துகொண்டு செயல்பட முடியாமல் போனது . வெள்ளையர்களிடம் இருந்து தப்பித்து சுபாஷ்சந்திரபோஸ் வெளிநாடுக்கு சென்றார் .

சில வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து தனது போராட்டத்தின் ஆதரவை திரட்டினார் . ஒவ்வொரு நாடாக சென்று போருக்கான ஆயுத தளவாடங்களை ஹிட்லர் மூலம் சேகரித்தார் . எல்லாம் தாயாரான பின்பு இந்தியாவில் இருக்கும் வெள்ளையர்களின் ராணுவ முகாம்களின் எண்ணிக்கை எங்கே இருக்கிறது எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று உளவு பார்த்து தகவல் அறிந்து கொண்ட பின்னர் .

தமிழ் நாட்டில் இருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கு தகவல் அனுப்பினார் . நான் வெளிநாட்டில் மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறேன் . இந்த ராணுவத்தில் இணைந்து நமது நாட்டு விடுதலைக்காக ஆயுதம் எடுத்து போராட விரும்புபவர்கள் . என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்று தகவல் அனுப்பி இருந்தார். இந்தியா முழுவதும் இந்த தகவல் பரவியது . இதை அறிந்த தமிழக தேச பற்றாளர்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படகு மூலம் வெளிநாட்டுக்கு செல்ல ஆரம்பிதார்கள் .

அங்கே எல்லோருக்கும் போர்ப் பயற்சி அளிக்கப்பட்டது . அப்போது போராளிகளிடம் சுபாஷ்சந்திரபோஸ் பேசினார் . எமது தேசத்தில் வெறும் இருபது ஆயிரம் வெள்ளையனின் ராணுவம் இருக்கிறது . நாம் இங்கு மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோம் . அவர்களை நாம் கப்பல் மூலம் சென்று டெல்லி வரை தாக்க போகிறோம் டெல்லியில் தான் வெள்ளையனின் முழு பலமும் இருக்கிறது எனவே டெல்லி வரை நாம் சென்று தாக்க போகிறோம் என்று சொன்னார் . ஆனால் இந்த ராணுவத்தில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிட தக்கது .

ஒரு பக்கம் காந்தியின் அகிம்சை போராட்டம் நடந்து கொண்டிருந்தது . சுபாஷ்சந்திரபோஸ் திட்டமிட்டபடி யுத்த ஆயுத கப்பல்கள் மூலம் சென்று டெல்லி வரை வெள்ளையர்களின் ராணுவத்தை அடித்தார்கள் . அப்போது வெள்ளையர்கள் பாரிய உயிரிழப்புக்களை சந்தித்தார்கள் . வெள்ளையர்களுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் ஆயுத உதவிகளை தடுத்தார்கள் முக்கியமான கடல்வழி பாதை சுபாஷ் சந்திர போஸின் கட்டுபாட்டுக்குள் வந்தது . அதனால் தொடர்ந்து வெள்ளையர்களால் யுத்தம் செய்யஇயலாமல் ஆயுத பற்றாகுறை வந்தது. பொருளாதார பிரச்சனையும் அவர்களுக்கு வந்தது. தொடர்ந்து அவர்கள் இந்தியாவில் இருப்பது பற்றி கேள்விகுறியானது .

சுபாஷ்சந்திரபோஸ் ராணுவத்தோடு நடந்து கொண்டிருக்கும் சண்டையில் வெள்ளையர்கள் தோல்வி அடைந்து கொண்டே வந்தார்கள். இந்த தோல்வியை அவர்களால் ஒப்பு கொள்ள முடியவில்லை. அதனால் வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தார்கள் .
ஆனால் இந்தியா முழுவதும் சுபாஷ்சந்திரபோஸ் அவர்களின் ராணுவ போராட்டம் தெரியவந்தது .

அதனால் காந்தி வழியில் போராடி கொண்டிருந்தவர்களுள் பெரும்பாலானோர் சந்திரபோஸ் அவர்களின் பின்னால் செல்ல ஆரம்பித்தார்கள். இதனால் வெள்ளையர்களுக்கு தொடர்ந்து இந்தியாவில் இருக்க முடியாத நிலைமை ஏற்ப்பட்டது . ஆயுத போராட்டத்தை காந்தி அவர்கள் கடுமையாக எதிர்த்து வந்தார் சுபாஷ் சந்திர போஸ் மக்களை தவறான வழியில் கொண்டு செல்கிறார் என்றும் கூறி வந்தார் .

காந்தியின் ஆதரவாளர்களால் சுபாஷ்சந்திரபோஸ் காட்டி கொடுக்க பட்டார் . அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள் வெள்ளையர்கள் . ஆனால் சிறையில் வேலை செய்தவர்களின் உதவியுடன் சுபாஷ் சந்திர போஸ் தப்பித்து வந்தார் . அதன் பிறகு ஆயுத போராட்டம் கடும் தீவிரம் அடைந்து வந்தது வெள்ளையர்கள் வெளியேறும் நிலைமையும் வந்தது .

ஆனால் நாங்கள் ராணுவ ரீதியாக தோற்கடித்து இந்தியாவில் விரட்டியடிக்க பட்டோம் என்று வந்து விடக் கூடாது என்பதற்காக . அப்படி ஒரு அவமானம் வந்து விட கூடாது என்பதற்காக காந்தியை நாடினார்கள் வெள்ளையர்கள் .

வெள்ளையர்கள் அகிம்சைரீதியாக போராடும் காந்தியை சந்தித்து நாங்கள் உங்கள் அகிம்சை போராட்டத்தால் உங்களுக்கு சுதந்திரம் கொடுக்க போகிறோம் நாங்கள் இந்தியாவை விட்டு போக போகிறோம் என்று சொன்னார்கள் . காந்தியின் அகிம்சை பெயரை சொல்லி வெள்ளையன் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்து விட்டு வெளியேறினான் .

ஆனால் தற்போது இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் சுபாஷ்சந்திரபோஸை மறந்து விட்டார்கள் . அவரின் மகத்தான போராட்ட வரலாற்றை திட்ட மிட்டு மறைத்து விட்டார்கள். காரணம் காந்தியின் அகிம்சை போராட்டம் பாதித்து விடும் இந்த வரலாறு மறைந்து விடும் என்பதற்காக.

மறைக்கப்பட்ட இந்திய வரலாறு

வரலாற்று உண்மைகள்.

இதற்கு கொஞ்சம் சரித்திரம் பார்ப்போம். கி. பி. 1070-களில் இருந்து தொண்டைமண்டலத்தில் தெலுங்கு சோழர்கள் ஆதிக்கத்தில் வந்துள்ளது. யார் இந்த தெலுங்கு சோழர்கள்? கி.பி.1070 ஆதிராஜேந்திரன் என்ற சோழர் குல தமிழ் வம்சாவளி அரசியல் சூழ்ச்சியால் கொல்லப்பட்ட பிறகு, தெலுங்கு சோழர்கள் எனப்படும் குலோதுங்க சோழர்கள் ஆட்சி ஆரம்பமானது. ராஜராஜ சோழனின் மகள் குந்தவி நாச்சியார் ,வேங்கி நாட்டு அரசனுக்கு திருமணம் செய்து கொடுத்து அந்த வம்சாவளியில் வந்தவர்கள் தங்களை தெலுங்கு சோழர்கள் என்பார்கள். பிற்கால சோழப் பேரரசு மத்திய இந்தியாவில் குறிப்பாக வேங்கி ,சாளுக்கியம்,கங்கம் ( தற்போதைய கர்நாடகம்,அதாவது மைசூர்க்கு வடக்கே, ஹுப்லி, ஹம்பி, பேலுர்.(பேலுர் கோயில்,சோழத் தளபதியை வென்றதற்கு நினைவாக கட்டப்பட்டது.) என தனது பேரரசை விரிவுப்படுதியது. இவர்களது அரசியல் போர்கள் அனைத்தும் மத்திய கர்நாடகம், ஆந்திரம் காக்கிநாடா, இங்குதான் நடந்து வந்துள்ளது ,அவர்களது குல எதிரிகளான சாளுக்கியர்களிடமே இப்போர்கள் நடந்துளது. தற்போது கர்நாடகத்தில் உள்ள ஹம்பி விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகராக இருந்துள்ளது.


ராஜராஜ சோழன் மிகச்சிறந்த சோழப் பேரரசனாக இருக்கலாம் ,ஆனால் அவன் தன் இனம் அழியக் காரணமானவன் என்பதும் வரலாற்று உண்மை. முதலில் களப்பிரர்கள் அந்நியர்கள் இல்லை, அவர்களும் தமிழ் குடியே, என்பது அண்மைக்கால வரலாற்று, சமூகவியல் ஆராய்சியாளர்களின் கருத்து. சமணமே அவர்களது மதம். மிகச்சிறந்த நல்லொழுக்க நூல்கள் அவர்களது காலத்தில்தான் ஏற்பட்டது. திருக்குறள் மிகச்சிறந்த சான்று.மதம் என்றுமே அரசியலில் மிகப் முக்கிய பங்கு வகிக்கும். சைவம் வளர சமணம் அழிக்கப்பட்டது. அத்துடன் களப்பிரர்களும் அந்நியர்கள் என்று அழைக்கப்பட்டனர். இளங்கோவடிகளும் ,திருத்தக்க தேவரும் மிகச் சிறந்த புத்த சமண பேரறிஞர்கள். பிரமணத்தை எதிர்த்து வந்ததே சமணமும், புத்த மதமும், பிற்கால சோழர்கள் காலத்தில் அரசு மற்றும் அரசியல் ஆதரவு பெற்ற வெள்ளாளர்கள், பிரமணர்கள் முற்றிலுமாக சமண, புத்த மதங்களையும், அவர்களது ஆதரவு அரசுகளையும் அழித்தனர்.



அதியமான் நாடான தர்மபுரி,கிருஷ்ணகிரி, வல்வில் ஓரி நாடான கொல்லிமலை,சேலம் நாமக்கல், பாரி நாடான வட,தென் ஆற்காடு மாவட்டங்கள், பிரான்மலை,புதுக்கோட்டை,கோவில்பட்டி,கழுகுமலை மேற்கு தொடர்ச்சி மலை,கரூர் என்று பண்டைய குறுநில அரசுகள் அனைத்தும் சமணத்தையே ஆதரித்து வந்துள்ளது என்பதற்கு பல்வேறு குகைக் கோயில்கள், கல்வெட்டுகள் இலக்கியச் சான்றுகள் எனப் பல உள்ளன. எனவே களப்பிரர்கள் வெளியில் இருந்து வந்து சமணத்தைப் பரப்பினார்கள் என்பது ஏற்புடையதாக இல்லை.. மேலும் களப்பிரர்களின் தலை நகரான செந்தலை தற்போதைய திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சைக்கு நடுவில், தமிழகத்தின் நடு மத்தியில் உள்ளது. செந்தலை கல்வெட்டில் அவர்களை கள்வர் காவலன். என்று அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களது கல்வெட்டுகள் அனைத்தும் தமிழ் வட்டெழுத்துகளாகவே உள்ளது. அந்நியர்களான பல்லவர்களை முன்னேற விடாமல் தடுத்து நிறுதியவர்கள் களப்பிரர்களே. பல்லவர்கள் தாய்வழி மற்றும் திருமணங்கள், கங்கர்கள் என்கிற தற்போதைய கன்னடர்களுடனே இருந்துள்ளது. இரண்டாம் நந்திவர்மன் தனது ஆட்சியை நிலைப் படுத்திகொள்ள தமிழகத்தின் தொண்டைமண்டல போர் மரபினர்களான, குறுநிலமன்னர்களுக்கு அதிக அரசியல் முக்கியத்துவம் கொடுத்து வந்தான். எனினும் இக்குறுநில மன்னர்கள் பல்லவர்களை முழு அதிகாரத்துடன் ஆள விடவில்லை தங்களது தமிழின அரசியல் அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டு இருந்தார்கள். பல்லவர்களின் அரசியல் போர்க்களம் பெரும்பாலும் தமிழகத்தின் வடக்கேதான் இருந்துள்ளது.



களப்பிரர்கள் கண்டிப்பான ஒழுக்க கட்டுப்பாட்டினை நடைமுறைப் படுதினார்கள். இதுவும் அவர்களது வீழ்ச்சிக்கு ஒரு காரணமாக இருந்தது. அதுமட்டுமல்ல தொன்மையான தமிழ் குடிகள் மத ரீதியாக செயல்பட்டதில்லை. குறிஞ்சிக்கு சேயோனும்,முல்லைக்கு மாயோன்,மருததிற்கு இந்திரன் ,நெய்தலுக்கு வருணன்,பாலைக்கு கொற்றவை.என ஐந்திணை அடிப்படையில்தான் இறைவழிபாடு. இருந்துள்ளது.அதேபோல இந்திரனை முக்கியமான தெய்வமாக வழிப்பட்டனர். இந்திரா விழாவாக மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இதன் வெளிப்பாடுதான் இன்றைய சித்திரை திருவிழாவாக இருக்கும். பெருவுடையார் கோயிலில் கூட பிரம்மா, சரஸ்வதி, விஷ்ணு வரிசையில் இந்திரனும் இருக்கிறார். முக்குலதோர்கள் இன்றும் தங்களை இந்திர குலத்தவர்கள் என்றே குறிப்பிடுகிறார்கள். எந்த காலகட்டத்தில், இந்திரனைப் பற்றி இழிவான பூரணக்கதை புனையப்பட்டது என்பது ஆராய்ச்சிக்கு உரியது. அதுமட்டுமல்ல போர்க் கடவுளான இந்திரன்,பிற்பாடு வழிப்பாட்டுக்கு ஏற்றவனாக இல்லாமல் போனது ஏன் என்றும் சந்தேகம் வருகிறது. முக்குலத்தவ்ரின் மூலவன் இந்திரன் என்றும் அவன் வழி தோன்றல்கள் இழிவானவர்கள் என்று புராண புனைக்கதைகளிச் செய்தவர்கள் யாராக இருக்கும்? ( சில நேரம் தோன்றும் தமிழர்கள் ஏன் மறுடியும் இந்திரா விழாவினைத் தொடங்கக் கூடாது? ஒருவேளை அப்படிக் கொண்டாடினால் நமக்கு பழைய வீரமும் வாழ்வும் வருமோ? இதைதாத்தான் revival and renaissance of culture என்பார்கள்.)



இதில் மற்றொரு நிகழ்வையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இன்றைக்கும் கள்ளநாடுகளில் குலசாமி வழிப்பாட்டில் கோடங்கி மேல் சாமி இறங்கும்போது எங்கு இருந்து வந்தாய் என்றால் வடக்கிலிருந்து வந்தேன் ,என்றும் எதற்கு வந்தாய் என்றால் காராள வெள்ளாளனை கருவருக்க வந்தேன் என்று சொல்வார்கள் அதன் பின்னரே வந்திருப்பது குலசாமி என்று முடிவு செய்வார்கள். இது வழி வழியாக வருவது. பெரியவர் வேங்கடசாமி நாட்டார் அவர்களும் கள்ளர்கள் தொண்டைமண்டலத்தில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறியிருக்கிறார். இந்தக் கூற்று பெரும்பான்மையான ஆராய்சியாளார்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.



விஜயநகர இளவல் குமரா கம்பண்ணன் தமிழகத்திற்குள் வரும்போது அவரது மனைவி கங்காதேவி மிகச் சிறந்த கவியரசி தனது குமார விஜயம் என்ற நூலில் தமிழகம் வரும்போது வழியெங்கும் மிகப்பெரிய அரச குடும்பங்கள், உயர்ந்த குடும்பங்கள் குழந்தைகள் உட்பட கொலை செய்யப்பட்டு அவர்கள் உடல்கள் அவர்களது வீடுகளில் எங்கும் கிடந்தன என்கிறார். மாலிக்கபூர் வரும்வழியில் உள்ள ஊர்களை அழித்து வந்தான் என்றாலும்,அவனது சிறுபடைக்கு அத்தனை உயர் குடும்பங்களையும் அழிக்க முடியுமா? அதுவும் உள்நாட்டில் உள்ள அதிகார குடும்பங்களை எப்படி கண்டு பிடித்து வீடு புகுந்து எப்படி அழித்திருப்பான்?



மற்றுமொரு நிகழ்வு, விஸ்வநாத நாயக்கர் மதுரைக்கு ஆட்சி செய்ய வரும்போது அவருக்கு உதவியாக வந்தவர், அரியநாத முதலி, காஞ்சிபுரம் அருகில் ஒரு சிறு கிராமத்தைச் சேர்ந்த ஏழை வெள்ளாள வகுப்பினர். இவர் காஞ்சியிலிருந்து விஜயநகரத்திற்குச் சென்று அங்கு அரண்மனையில் கணக்கராக இருந்துள்ளார். தமிழகத்தில், பாளயங்கள் அமைத்தது அரியநாத முதலிதான்.



ஏற்கனவே தொண்டைமண்டல வெள்ளாளர்களுக்கு தெலுங்குஅரசர்கள் தொடர்பு இருந்துள்ளது என்பது தெரிகிறது. அதுமட்டுமல்ல சித்திரமேலி பெரியநாடு பற்றி படிக்கும்போது அதன் நிர்வாகிகள் தமிழில் மட்டுமல்லாது வடமொழிகளிலும் ஆழ்ந்த திறமைப் பெற்றவர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். உயர் கல்விஞானம் கொண்ட வெள்ளாளர்கள் அன்னியர்களுடன் சுலபமாக பழகும் வழக்கம் இயல்பாகவே வந்திருக்கும். இதன் காரணமாக தெலுங்கு சோழர்கள் காலத்திலிருந்தே முக்குலதோரின் அரசியல் அதிகாரங்களை கைப்பற்ற வெள்ளார்கள் முயன்று இருக்க வேண்டும்.



தமிழகத்தில் மட்டுமல்ல இலங்கையிலும் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அனுராதபுரம் வரை விரிந்து இருந்த தமிழ் சமுதாயம் குறுகியது நாயக்கர்கள் கால கட்டத்தில்தான்.அதாவது வெள்ளாளர்கள் அரசாங்க அதிகாரத்தில் நுழைந்த போதுதான். சிங்களவர்களுக்கும், பாண்டிய அரச வம்ஸத்திற்கும் காலம் காலமாக திருமண உறவு இருந்துள்ளது. பாண்டிய வம்சம் சீர்குலைந்த பிறகு, தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் உள்ள உறவுகள் பல்வேறு காரணங்கள் காரணமாக பிளவு ஏற்பட்டது. அதில் மதம் முக்கிய பங்கு வகிக்கிறது.



பிற்கால சோழர்கள் தங்களுடைய ஆட்சிக்குட்பட்ட பிற நாடுகளில் வேளிர் படை, அகம்படியர் படை இவர்களை பாதுகாப்பிற்காகவும், வெள்ளாளர்களை விவசாயத்திற்காகவும், நிர்வாகத்திற்காகவும் அமர்த்தியுள்ளார்கள். அதனால்தான் முக்குலதோரில் கள்ளர் ,மறவரை விட , அகம்படியர் மைசூர், வாராங்கல், முதல் இலங்கை வரை இருந்துள்ளனர். அகம்படியர்கள் தஞ்சையில் தேவர்கள் என்றும் பிள்ளை என்றும் அழைக்கப் படுவார்கள். தென்பாண்டி மண்டலத்தில், தேவர் என்றும், சேர்வை என்றும் அழைக்கப்படுவார்கள்., தொண்டைமண்டலதில் , முதலியார்கள், நாயக்கர்கள் என்றும் அழைக்கபடுவார்கள். அதாவது அரசு நிர்வாகத்தில் இருப்பவர்கள் பிள்ளை, சேர்வை,முதலியார்கள் என்றும், போர் மற்றும் இராணுவத்தில், காவல் கடமையில் இருப்பவர்கள் தேவர்கள், நாயக்கர்கள் என்று அழைக்கப் படுவார்கள். நாயக்கர்கள் போர் மற்றும், காவல் தொழிலில் ஈடுபடுபவர்கள் அதனால்தான் தொண்டை மண்டலத்தில் அகம்படியர் நாயக்கர், வன்னிய நாயக்கர்கள் இருக்கிறார்கள்.( ஒரு அன்பர் அகம்படியர் ஆனால் நாயக்கர் என்ற பட்டம் உள்ளது என்றார். இதைப் படித்தால் தெளிவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.)



பிற்கால சோழர்களின் காலத்திற்குப் பிறகுதான் தொன்மையான தமிழ் பழங்குடி போர்மர்பினர் ,குறுநில மன்னர்கள் அழிக்கப் பட்டனர். உதாரணத்திற்கு, அதியமான், மலையமான்,சம்புவரையர், முத்தரையர், இவர்கள் மட்டுமல்ல எயினர், வேட்டுவர் என்று பல மலைவாழ் பழங்குடியினரும் காணாமல் போனார்கள். மேலும் பிற்கால சோழர்கள் ஒரு குடையின் கீழ் தங்களது ஆட்சியைக் கொண்டு வர குறுநில மன்னர்களை ஒடுக்கினார்கள்.



காவேரியின் நீர்வளத்தை முழுமையாக பயன்படுத்த நினைத்ததால் காடுகளை அழித்து அதனை விவசாய பூமியாக மாற்றினார்கள். இதனால் பிற்கால சோழர்கள் காலத்தில் உழவர்களான வெள்ளாளர்கள் அதிகாரம் பெற்றனர். மேலும் வெள்ளாளர்கள் ஆதீனங்கள் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு கல்வி ,கேள்விகளில் சிறந்து இருந்தனர். பேரரசுகள் மறைந்த பிறகு அதுவாரை அரசு நிர்வாகத்தில் இருந்த போர்மரபினர்கள் மெல்ல மெல்ல தங்கள் அதிகாரத்தை இழக்க,,வெள்ளாளர்கள் அரசு அதிகாரங்களை கைப்பற்றி தங்களை சத்- சூத்திரர்கள் என்றழைத்துக் கொண்டனர். இந்த நிலை 18ஆம் நூற்றாண்டுவரை இருந்து வந்துள்ளது என்பதை Edgur Thurston, ‘Caste and Tribes in South India’.என்ற நூலில் அறியலாம். மேலும் வெள்ளாளர்கள் தங்களை துளுவ வெள்ளார்கள் என்று விஜயநகரம் துளுவர்களின் ஆட்சியில் வந்த பிறகு இவ்வாறு அழைத்துக் கொண்டார்களா என்று தெரியவில்லை. கிருஷ்ண தேவராயர் துளுவ வம்சாவளியில் வந்தவர். வெள்ளாளர்கள் பிரமணியத்தைக் காப்பியடித்து தங்களை உயர் சாதியினராக காட்டிக்கொண்டனர். ஆங்கிலயர்கள் காலத்தில் அரசாங்க வேலைக்கு அதிக போட்டி பிராமணர்களுக்கும் வெள்ளாளர்களுக்கும்தான் இருந்துள்ளது.



சோழன் காந்தளூர்ச்சாலையை கைப்பற்றி 100 வருட சேர சோழ போரினை உருவாக்கி, தொன்மையான தமிழ் தேசமான சேரளத்தை ,கேரளமாக்கினான். 10ஆம் நூற்றாண்டில் கேரளம் உருவானது. தெலுங்கனுக்கு பெண்னைக் கொடுத்து, தெலுங்கர்கள் சோழ நாட்டை ஆள வழி வகுத்தான், பிரமணத்தை தமிழகத்திற்கு கொண்டு வந்தான் சுர்திரர்களில் வெள்ளாளர்களை மட்டும் உயர்தினான். சோழனை தடுத்து நிறுத்தியது பாண்டியனே. தமிழினத்தை அன்றும்,இன்றும் என்றும் காத்து நிற்பதால் தான் இன்றும் தமிழகத்தில் எங்கும் பாண்டியனின் பெயர் பட்டி தொட்டிகளில் எல்லாம் பேர் சொல்லி நிற்கிறது. தென்பாண்டி மண்டலத்தில்தான் இன்றுவரை பிரமிண ஆதிக்கம் இல்லை, பிரமிணர்களைப் பார்த்து காப்பியடிப்பதும் இல்லை.



ஏற்கெனவே தெலுங்கு சோழர்கள் காலத்திலே தொண்டைமண்டலம் மெல்ல மெல்ல தமிழகத்தை விட்டு அந்நியர்களின் வசமானது. துலுக்கர்களால் துரத்தப்பட்ட வந்தேறிகள் தமிழக தெலுங்கர்களால் அடைக்கலம் தரப்பட்டது. தமிழகத்தின் காட்டுப் பகுதிகளையெல்லாம் ஆக்கிரமித்து பாளயங்களாக்கி தங்கள் அரசியல் அதிகாரத்தை ஊன்றிக்கொள்ள தமிழனிடம் சாதி பேதங்களை உருவாக்கினான்.விஜயநகர பேரரசு முற்றிலும் பார்ப்பன வர்ணாசிரமத்தை அடிப்படையாக கொண்டது. 11ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் எங்கும் சாதி பேதங்கள் இல்லை.



தமிழ்ச் சமுதாயம் மூன்று வகுப்பினர்களைக் கொண்டது. 1.காவலன், வணிகன், சூத்திரன். அறிவோன் எந்த வகுப்பினராகவும் எந்த தொழில் செய்பவராகவும் இருக்கலாம். அறிஞர்களை,ஆன்றோர்களை, மக்கள் நலம் காப்பவர்களை மன்னனும், மக்களும் போற்றி வணங்கினர். போர்மரபினர்கள் காவலர்களாகவும், குறுநில மன்னர்களாகவும். பேரரசர்களாகவும் இருந்து வந்துள்ளனர். இங்கு போர்மரபினர் எனப்படுபவர்கள் முக்குலத்தோர், முக்குறுவார், முத்தரையர், வேளிர், கொங்கர், மலையமான், அதியமான், எயினர், இன்னும் பலர். துலுக்கர் மற்றும் நாயக்கர்கள் வரவால் கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட தொன்மையான தமிழ் குடிகள் அழிந்ததாக கூறுகின்றனர். இவர்கள் இராணுவம்,காவல் (போலீஸ்), கோட்டைக் காவல் வரிவசூல், அரச நிர்வாகம் போன்ற பொறுப்புகள் உள்ளவர்கள்.



வணிகர்கள் மிகப்பெரிய பன்னாட்டு வணிகர்களும், பெரும் வணிகர்களுமான, நானாதேசிக வணிகர்கள் என்றழைக்கப்பட்டார்கள். செட்டியார்கள் மட்டுமின்றி பரதவர்களும் செல்வாக்கு மிக்க வணிகர்களாக இருந்துள்ளனர்.



சூத்திரர்கள் தொழில் முறைகளை அறிந்த சூத்திரதாரிகள். இவர்கள் வலங்கை, இடங்கை என்ற இருபிரிவுகளால் அழைக்கப்பட்டனர். விவசாயம் அதைச் சார்ந்த தொழில்களைக் கொண்டவர்கள் வலங்கைகள். வெள்ளாளர்கள், பள்ளர்கள், உழவுத்தொழிலுக்கு கருவிகள் செய்யும் ஆசாரிகள், விவசாயப் பொருட்களால் வரும் எண்ணை, போன்றவற்றை விற்கும் வணிகர்கள் பனையேறுபவர்கள் போன்றவர்கள், இவர்கள் அரசனுக்கு வலப்புறம் அமர்வார்கள் . விவசாயத்திற்கு அப்பாற்பட்ட தொழில் செய்பவர்கள் இடங்கைகள் இடையர்கள், நெசவாளர்கள்,வண்ணார்கள், பறையர்கள் போன்றவர்கள் இவர்கள் அரசனுக்கு இடப்புறம் அமர்வார்கள். இன்னும் எண்ணற்ற தொழில்சார்ந்த தமிழினம் விவசாயத்தை அடிப்படையாக கொண்டு அரசவையில் அரசனுக்கு வலப்புறம், இடப்புறம் அமர்ந்து அரசாங்கத்தில் பங்கேற்று உள்ளனர்.



அதுமட்டுமல்ல மிகப்பெரிய கோவில்கள் தனிப்பட்ட collectorate ஆக சுதந்திர நிர்வாகத்தை மேற்கொண்டுள்ளது. இதுவே பின்னர் ஆதினங்களாக அழைக்கப்பட்டது. குடிமராமத்து, பண்பாடு, கலாச்சாரம், தமிழ் மொழி வளர்ச்சி இவையெல்லாம் இவர்களது பொறுப்பானது. இந்த கோவில்கள் அல்லது ஆதீனங்கள், அவர்களுக்கென்று தனிக் காவல் படைகளை, பிரிவினரை வைத்திருப்பார்கள். பெரும்பாலும் கோவில்கள் ஆதீனங்கள் வன்னியர்களை தங்களது கோயில் சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளுக்கும் வைத்திருந்தன.. குறிப்பாக தொண்டைமண்டலம் மற்றும் சோழ மண்டலம். வன்னியர்களை படையாட்சிகள் என்று அழைப்பார்கள்.வன்னியர்கள் போர்க்காலங்களில் படைகளுக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் உடனுக்குடன் கவனித்ததால் இவர்களை படையாட்சிகள் என்றார்கள். கூகையூர் கல்வெட்டில் குறிப்பிடபடும் காவலர்கள் தனிப்பட்ட சிறு காவலர்கள் ( watchman) . இராணுவம், போலீஸ் வேறு. முக்குலத்தோர் எந்தவகையிலும் வலங்கை,இடங்கை பிரிவுகளில் இல்லை.



சித்திரமேலி பெரியநாடு, குறுநில அரசுகள் போர்மரபினரை பாதுகாப்பிற்காக வைத்திருந்தனர். இவைப் போன்றே நானாதேசிக வணிகமையங்கள் போர்மர்பினரை பாதுகாப்பிற்காக வைத்திருந்தனர். போர்க்காலங்களில் இந்தப் படைபிரிவுகள் பேரரசு படைகளுடன் சேர்ந்து கடல் கடந்தும் போருக்குச் செல்லும். பாண்டிய மண்டலத்தில் முக்குலத்தோரும், சேர மண்டலத்தில் நாயர்களும் இராணுவத்தையும் காவலையும் மேற்கொண்டனர். இன்றளவும் இவர்களது ஆதிக்கம் இவ்விரு மண்டலங்களில் இருந்து வந்துள்ளது. ஆனால் காலத்தின் கொடுமையால் சோழ, தொண்டைமண்டலத்தில் அகம்படியரும் வேளிரும் இன்ன பிற போர்மரபினர்கள் செல்வாக்கு இழந்து காணாமற் போய் விட்டார்கள்.



இப்படிபட்ட விவசாயத்தைச் சார்ந்த சமுதாய அமைப்புகளே சித்திரமேலி பெரியநாடு, பிரம்மதேயம், ஆதீனங்கள், வணிகமையங்கள், இவைக்களது நிர்வாகம் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நடந்து வந்துள்ளது.அனைத்து வகுப்பு பிரதிநிதிகள் நிர்வாகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். (வகுப்புகள்தான் உண்டு, சாதி வேறுபாடு இல்லை.)வளமான காலங்களில் போர்க்காலங்களில் அதிக வரிகளும், பஞ்ச காலங்களில் குறைந்த வரிகளும் விதிக்கப்பட்டன. வரிகள் அந்தந்த சமுதாய அமைப்களின் கிராம, அதன் பொறுப்பில் இருக்கும் நிர்வாக வளர்ச்சிக்குமே செலவிடப்பட்டது. நீதியும் நிர்வாகமும் அந்தந்த சமுதாயத்திடமே இருந்தது.



Tamil society was more republic than autonomous. There was no caste discrimination. - that people were never associated with caste as an organization but they were integrated as caste within the society. – Burton Stein.



இதுதான் தமிழினம், இதுதான் தமிழ் சமுதாயம்.. இதைப் புரிந்துக் கொண்டால் என் இளைய தலைமுறை நமது சகோதர சாதிகளை எப்படி மதித்து வாழ வேண்டும் என்று அறிந்துக்கொள்ளும். இதைத்தான் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் வலியுறுத்தினார். இதைதான் தலைவர் பிரபாக்கரன் நடைமுறைப் படுதினார்.



ஆனால், தமிழகத்தின் தமிழனக் காவலர்களுக்கு தமிழ் சமுதாயம் துண்டுபடாவிட்டால் எங்கே துயர் துடைக்க முடியாமல் போகுமோ என்ற ஆதங்கத்தில் சாதீயில் நம்மை முக்கி மூழ்கடிக்கிறார்கள்.



தமிழகத்தில் நடந்த முதல் சாதிக் கலவரம் எங்கு நடந்தது தெரியுமா?



பேரரசுகள் அழிந்து அவர்களின் பிரதிநிதிகளான போர்மரபினர் அழிக்கப்பட்டும், அதன் தலைமைகள் சிதறுண்டு போனபோது, வெள்ளாளர்கள் தங்களை மறைமுகமாக அதிகாரவர்க்கமாக நிலை நிறுத்திக் கொண்டார்கள். 1482-இல் தஞ்சை, திருச்சி தென்னாற்காடு அதாவது அன்றைய சோழ நாட்டில் வெள்ளாளர்கள், வன்னியர்களின் துணையுடன், நாயக்கர்களை திருப்திபடுத்தவும், தங்களை அதிகாரிகளாக நிலை நிறுத்தவும் இடங்கை,வலங்கை பிரிவில் உள்ள 96 சாதிகளின் மீது வரிவசூல் மட்டுமல்ல சாதி வேறுபாடுகளையும் கொண்டு வந்தனர்.



இறையேலி பரப்பி, பந்தரவாடி, சீவிதபரப்பு என்பதும் கோயில் நிலங்கள். இந்நிலங்கள் அடைப்பு – நீர்பட்டி என்று குத்தகையோ சேர்வையோ, நில வரிகளோ கிடையாது. இவைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டு இதனை இடங்கை,வலங்கை மக்கள் அனுபவித்து வந்தார்கள். நாடிழந்த ,துரத்தப்பட்ட நாயக்கர்கள் ( நாயக்கர்கள் என்பது 13ஆம் நூற்றாண்டில் தெலுங்கர், கன்னடர்,இருவரையும் சேர்த்தது). தலைமை இல்லாத தமிழகத்தில் வெள்ளாளர்களைப் பயன்படுத்தினார்கள். தங்களைக் ஆண்டாண்டு காலம் காவல் காத்தவனைக் காட்டிக்கொடுத்து, வந்தேறிகளுக்கு வாசலை திறந்து வைத்து வெள்ளாளர்கள் ஆளா விரும்பியதால், வன்னியர்கள் தங்களை காவல்காரர்களாக உயர்திக்கொள்ள வெள்ளாளர்களுடன் இணைந்து பிற தமிழ்ச் சாதிகளை அடக்க நினைத்தார்கள். கொற்றவர்கள் மறைய, சொந்த சகோதரன் காட்டிக்கொடுக்க, பொருள் இழந்த நாயக்கனின் அநியாய வரிவசூல், தமிழகத்தில் முதல் சாதிக் கலவரம் அரங்கேர காரணமானது. இதன் பலன் 1. தமிழர்களிடம் அநியாய வரிவசூல், 2.தமிழர்கள் அனுபவித்து வந்த காணி நிலங்களைச் சூறையாடல், 3.தமிழ் சமுதாயத்தில் வேற்றுமையை உருவாக்கியது. வெள்ளாளர்களின் நாடாளும் ஆசையே தமிழினம் சிறுமைப்பட ஆரம்பித்தது.



ஒரு உண்மையை நாம் முழுமையாக புரிந்துக் கொள்ள வேண்டும். சிறு குழுவாக , மொழி தெரியாமல் வரும் வந்தேறிகள் உடனடியாக நாடு பிடிக்கவோ, நிலங்களை கைப்பற்றவோ முடியாது. உள்ளிருந்து துரோகம் செய்பவர்களாளேயே இனம் அடிமைப்படும்,வீழும்.



தென்பாண்டி மண்டலமும் பாண்டியனுமே தமிழினத்தை பல நூற்றாண்டுகளாக காத்து வருகிறார்கள். எந்தவொரு அந்நிய ஆட்சிக்கும் வட தமிழகம் என்றுமே எதிர்த்தது இல்லை என்பது ஏன் என்று யோசிக்க வேண்டும். சிறுபான்மையாக குறுநிலமாக இருந்தாலும் கொங்கு மண்டலம் மேற்கில் தங்களது உரிமைகளை காத்து நின்று வருகிறார்கள். தெலுங்கு சோழர்கள் பின்னர் நாயக்கர்கள் வந்தபோதும் தலைவாசலை வடதமிழகம் திறந்து வைத்து வந்தாரை வாழ வைத்து தன் இனத்தை காட்டிக் கொடுக்க ஆரம்பித்தது.



நாயக்கர்கள் வரவால் முற்றிலும் அழிந்தது வீரமும் தீரமும் மிக்க பரதவர் குலம். டச்சுக்காரர்கள், போர்தூகீசியர்கள் தமிழ் கடலோரப்பகுதிகளை முற்றிகையிட்டபோது எந்தவொரு எதிர் நடவடிக்கையையும் நாயக்கர்கள் ஆட்சி மேற்கொள்ளவில்லை. மதத்தின் பேரால் போர்தூகீசியர்கள் தமிழர்களின் வாழ்வில் ஊடுருவதை வன்மையாக தடுத்து நிறுத்தியவர் இராமனாதபுர மன்னர் கிழவன் சேதுபதி. அதுமட்டுமல்ல நாயக்கர்களை அதிகாரத்தை மதுரை நகரத்துடன் தடுத்தவந்ததும் சேதுபதிகளே. மதுரையை முற்றுகையிட வந்த கன்னடர்களை மைசூர் வரை விரட்டியடித்த புகழ் பெற்ற மூக்கறுப்பு போர் நிகழ்தியவர் கிழவன் சேதுபதி, மூக்கறுப்பு போரின் வெற்றிக்கு முழுக்கரணமானவர் தளபதி வயிரவன் சேர்வை அவர்கள். அவர் சேது மண்டலத்திலிருந்து படை திரட்டி சென்ற போது அவர் படையில் மறவர்களுடன் சேர்ந்து போரிட்டு வெற்றியை , தமிழர் மானத்தைக் காத்தவர்கள் மதுரை வாழ் கள்ளர்கள், அகம்படியர்கள். எனவே முக்குலத்தோர் அநாவசியமாக தங்களுக்குள் உயர்வு தாழ்வு பார்க்க வேண்டாம். இன்றுவரை அனைத்துவகை அரசியல் ஆதிக்கத்திலுமிருந்து தங்களை காத்து வருவது தொன்மையான போர்மரபினரான முக்குலம் என்பது சரித்திர உண்மை.



முக்குலத்தோர் போர் களங்களில் இருக்கும்போது அவர்களது நிலங்களையும் விவசாயத்தையும் குடும்பங்களையும் பாதுகாத்தது பள்ளர்களும், பறையர்களும்தான். இன்றைக்கும் நமது குலதெய்வ கோயில்களில் இவர்கள் பூசாரிகளாகவும், முதன்மை மரியாதைப் பெறுபவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே அரைகுறையாக வரலாறை அறியாமல் நமக்குள் சண்டை எதற்கு? ஆங்கிலேயர்கள் காலத்தில் சாணார்கள் அரசியல் ஆதாயம் பெறவும், பின்னர் காமராஜரின் அரசியல் சூழ்ச்சியிலும் ,பின்னர் வந்த திராவிடக் கட்சிகளின் அரசியல் பாதுகாப்பிற்காகவும் முக்குலதோருக்கும் பள்ளர்கள், பறையர்களுக்கும் இடைவிடாத வேற்றுமைகளை உருவாக்கி வருகிறார்கள்.



உலகின் தொன்மையான பல civilization-களில் நடப்பதுதான் தமிழர்களுக்கும் நடந்து வருகிறது. தொடர்ந்து பல போர்கள், பல அந்நிய ஊடுருவல்கள் அரசியல் அடக்குமுறைகள் இவற்றை எல்லாம் கடந்து இன்றும் தமிழினம் வாழ்வது மிகப்பெரிய அதிசயம்தான். ஆனால் இன்றைய தமிழர்கள் மிக் மோசமாக மூளைச்சாளவை செய்யப்பட்டு உள்ளார்கள். நமது கலாச்சாரம் திராவிட இயக்கங்கள் மூலமாக முழுக்க முழுக்க dilute ஆகி செல்லுலாயிட் கலாச்சாரமாகிவிட்டது. நாயக்கர் ஆங்கிலயர்கள் காலத்தில் தமிழனுக்க் வீரம் இருந்தது இன்று வெறும் அலப்பறைகள்தான் உள்ளது.



இதிலிருந்து நாம் மீளவேண்டும் என்றால் மறைக்கப் பட்ட நமது வரலாறு, தெரிய வேண்டும். அன்னியர்களின் ஊடுருவல் எப்படி நிகழ்கிறது? நமது வசம் உள்ள நாடும், நிலமும் நம் ஆளுமையிலிருந்து எப்படி பிரிந்தது? இன்றுள்ள தமிழ்நாட்டில் தமிழர்கள் மைனாரிட்டி மெஜாரிடியா ? வாட்டல் நாகராஜன் தமிழகத்திற்கு வந்து தமிழ் கல்வி கூடாது என்று சொல்வதற்கும், அந்த கன்னட காங்கிரஸ் MLA- க்கு ஓட்டுப் போட்டது யார்?தமிழகளின் வழிகாட்டி வள்ளுவாரா,பெரியாரா? தமிழகத்தில் ஊடுறுவல் எந்த அளவு உள்ளது? தமிழகம் ஏன் குறுகி வருகிறது? தமிழர் வாழும் இடங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு வருவது எதனால்? நமது தமிழினத் துரோகிகளை எப்படி அழிக்க வேண்டும்? அவர்களுக்கு நாம் ஏன் அரசியல் அங்கிகாரமும், அதிகாரமும் தரவேண்டும்? இவர்கள் பின்னால் இருந்துக் கொண்டு நம்மை அனைத்து விதத்திலும் கேவலப் படுத்தி அழிக்கும் அடிமைகளை என்ன செய்யப் போகிறோம்? இதையெல்லாம் பற்றி அறிந்துக் கொள்ளாமல் ,அவற்றை எப்படி நிவர்த்தி செய்வது என்று யோசிப்பதை விட்டுவிட்டு நமக்குள் நாம் ஏன் அடித்துக் கொள்ள வேண்டும்? அடக்கபட வேண்டியவர்கள் யார்?



மற்றுமொரு சோகமான ,ஜீரணிக்க முடியாத விஷயம் என்னவென்றால், பல தமிழர் வரலாற்று ஏடுகள், ஆவணங்கள், ஒலைச்சுவடிகள், ஆடிப் பெருக்கு விழாவின் போது காவேரியிலும், கடலிலும்,ஆறுகளிலும் தூக்கி எறியப்பட்டு உள்ளது, பல கார்த்திகை தீபமன்று சொக்கப்பானையில் எரிக்கப்பட்டு உள்ளது, இவையெல்லாம் புத்திசாலித்தனமாக வழிபாடு முறைகளாக செய்துள்ளனர்.



நாயக்கர்கள் காலத்திலும், ஆங்கிலயர்களும் காலதிலும் தமிழினம் ஒன்றுப் பட்டு போராடியது. அன்று இனம் வாழ மாபெரும் மனிதர்கள் தங்கள் சொத்தையும் ,இன்னுயிரையும் தந்தார்கள். 1750-ளில் இருந்து பூலிதேவன், வேலு நாச்சியார், மருதுபாண்டியர்கள், அழகு முத்துக்கோன், தீரன் சின்னமலை, ,அடுத்தகட்டமாக வேலூர் சிப்பாய் கிளர்ச்சி ,குற்ற பரம்பரை சட்ட எதிர்ப்பு ,அதன் அடுத்தகட்டமாக வ.உ. சி.சிதம்பரம் பிள்ளை ,பாரதியார், அடுத்தகட்டமாக பசும்பொன் தேவர், ஜீவானந்தம், தியாகி சுந்தரலிங்கம் போன்றவர்கள் என்று உழைக்கும் வர்க்கத்தினருக்காக, சாதாரண மக்களின் சுதந்திரத்திற்காக போராடினார்கள். தமிழினம் சாதி பேதமற்று ஒன்றுப்பட்டு போராடியது. யாரை மதிக்க வேண்டுமோ அவர்களை மதித்தது.



முன்னாள் முதல்வர் காமராஜர் எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும், தமிழகத்தில், அரசியல் ரீதியாக சுதந்திரதிற்கு பிறகு, இன்றைய சாதி கலவரங்களுக்கு முதன்மையான காரணகர்த்தா அவர்தான். அதுமட்டுமல்ல தமிழகத்தின் நலனை பற்றி யோசிக்காமல் தனது சாதி நலனை முன்னிறுத்தி மோசமான அரசியலுக்கு வழி வகுத்தவர் என்பதும் அப்பட்டமான உண்மை . டெல்லிக்கு அடிமை அரசியல் எப்படிச் செய்வது என்பதற்கு முன்னுதாரணமும் அவரே. தமிழகத்தில், கள்ளமார்கெட், கருப்பு பணம், கலப்படம், விவசாயிகளிடம் அநியாய கமிஷன் மார்கெட்டும் உருவாக்கியதும் அவரே. தென் மாவட்டங்களில் எந்தவித வளர்ச்சி பணியும் இல்லாமல் செய்தவரும் அவரே, இத்தனை செய்தவரையும் அவரது கட்சியையும் , பத்திரிக்கைகள் ஆயிரம் புகழ்ந்தாலும் மக்கள் புறக்கணிப்பார்கள் என்பதற்கு முன்னுதாரமும் அவரே. இது வரலாறு. மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.



பதினோராம் நூற்றாண்டில் இருந்து தமிழினம் மெல்ல மெல்ல தனது அரசியல், பொருளாதார,சமூக நிலைகளில் இருந்து கடை நிலைக்கு குறுகி வருகிறது. இந்த மாற்றம் அதே சூழ்நிலையில் வெவ்வேறு பரிணாமங்களில் இன்றளவும் தமிழகத்தில் தொடர்ந்து வருகிறது. வரலாறு என்பது ராஜராஜ சோழன் பெருமையை பேசுவதோ, முக்குலத்தவர்கள் சாதிப் பற்றோ, வெள்ளாளர்களை குற்றம் சொல்வதோ, வன்னியர்களை குறைச் சொல்வதோ அல்ல. நம் இனம் எப்படி அழிந்தது, இன்றளவும் எப்படி அழிக்கப்பட்டு வருகிறது என்பதுதான். வரலாறுகளின் உண்மையை அறிய வேண்டும். 700 நூறு ஆண்டுகளாக திரிக்கப்பட்ட, மறைக்கப்பட்ட தமிழக வரலாறு இன்று தனது உண்மை சொருபத்தை கொஞ்சமே கொஞ்சமே வெளிக்காட்டுகிறது. அதனைப் அப்படியே ஏற்றுக்கொண்டு அதனை புரிந்துக் கொண்டு நம் சந்ததிகளை பாதுகாக்க வேண்டும். இனத்தை பாதுகாக்க வேண்டும்.



நாயக்கர்கள் காலத்தில், வெள்ளாளர்கள் , ஆங்கிலேயர்கள் காலத்தில் சாணர்களும், காங்கிரஸ், திராவிட கட்சிகளின் காலத்தில் பள்ளர்களும் ,பறையர்களும் சலுகைகளுக்காக,பதவிக்காக வந்தேறிகளுக்கு அடிமைப்பட்டு தமிழினத்தின் அழிவுக்கு காரணமாகி வருகிறார்கள். பின்னர் தங்கள் இனத்திலே தனிமைப்பட்டு விடுகிறார்கள். இவர்களின் அரசியல் போக்கால் அழிவது அனைவரும்தான். சிறுபான்மையான பிராமணர்கள் ஆள்பவர்களின் தயவுடன் தமிழகத்தில் தங்களை நிலை நிறுத்திக் கொண்டார்கள். பிரமணர்களின் மிகப்பெரிய சொத்து  இந்த திராவிட கருணாநிதியும், ஜெயலலிதாவும்தான். அதனால்தான் நம் இனம் மிக வேகமாக அழிகிறது. இவர்களது அரசியல் அதிகாரத்திற்கு, இந்த திராவிட கழகங்களின் அரசியல் பலத்திற்கு தமிழினம் சாதிச் சண்டையில் அழிகிறது. முட்டாள்கள் நாம்தான்.



இனியாவது திருந்துவோமா?தமிழர்களே..........



வாழ்க தமிழர். வளர்க அவர்தம் வாழ்வு.

தமிழக சாதி பேதங்கள்